தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

முத்தரப்புப் போட்டி: ஆஸ்திரேலியா ஏ அணி அபார வெற்றி!

தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும் பர்ன்ஸும் அதிரடியாக ஆடினார்கள்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 11:46 am

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா ஏ அணி, 119 ரன்கள் வித்தியாசத்தில் அமர்க்களமாக வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள "ஏ' அணிகளிடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. 4 நாள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஏற்கெனவே இந்திய ஏ அணியைத் தோற்கடித்த ஆஸ்திரேலிய ஏ அணி, முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க ஏ அணியையும் சாய்த்து அபாரமாக செயல்பட்டு வருகிறது.

டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் ஒரு நாள் தொடரில் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்பில் ராகுல் திராவிட்டிடம் பயிற்சி எடுத்துவரும் இந்திய ஏ அணி உள்ளது. எனவே இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டி ஆரம்பித்தது முதல் ஆஸ்திரேலியா ஏ அணியே ஆதிக்கம் செலுத்தியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய உஸ்மான் கவாஜாவும் பர்ன்ஸும் அதிரடியாக ஆடினார்கள். இருவரும் சதம் அடித்தார்கள். 36-வது ஓவரின்போதுதான் இந்தக் கூட்டணியைப் பிரிக்கமுடிந்தது. கவாஜா 100, பர்ன்ஸ், 154 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 334 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா ஏ அணி.

கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்களா, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் திணறினார்கள். 42.3 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.