தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிஎஸ்கே தடையை நீக்கவேண்டும்: ரசிகர்கள் கையெழுத்து இயக்கம்!

ரசிகர்களின் இந்த கோரிக்கை பிசிசிஐ மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படும்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2015, 12:33 pm

சிஎஸ்கே அணி மீதான இரு  ஆண்டுகள் தடையை நீக்கவேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.

2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நடந்த சூதாட்ட வழக்கை விசாரித்த லோதா தலைமையிலான குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. அதோடு சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டு அமைப்புகளில் பங்கேற்கமுடியாதபடி ஆயுள்கால தடைவிதித்தது.

இதனால் 2016-ம் ஆண்டுக்கான ஐபிஎல்- போட்டியில் சென்னை அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை அணி வீரர்களின் எதிர்காலம் குறித்தும் குழப்பம் நிலவுகிறது. இதனால் கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள். தோனியின் தீவிர ரசிகரான சரவணன் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

Story image
Story image

சேவ் சிஎஸ்கே என்கிற பிரசாரத்துடன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே ரசிகர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. ரசிகர்களின் இந்த கோரிக்கை பிசிசிஐ மற்றும் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படும் என்று சரவணன் தெரிவித்தார். சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் சென்னை மீதான இரு ஆண்டு தடை நீக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணியின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.10 கோடி ரசிகர்கள் லைக் செய்துள்ளார்கள். ட்விட்டரில் சிஎஸ்கேவுக்கு 18 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.