எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னை ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா சாம்பியன்

சென்னை, ஜன.9: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.  இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

சென்னை, ஜன.9: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

 இவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சேவியர் மலிûஸ வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

 சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவும், 61-வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் சேவியர் மலிஸýம் மோதினர்.

 முதல் செட்டில் முதல் கேமில் சர்வீûஸ சிறப்பாக கையாண்டார் வாவ்ரிங்கா. அதேசமயம் மலிஸ் மிகச்சிறப்பாக ஆடினார். கடுமையாகப் போராடிய மலிஸ் வாவ்ரிங்காவின் சர்வீûஸ முறியடித்து கேமை தன்வசமாக்கி வாவ்ரிங்காவுக்கு அதிர்ச்சியளித்தார். இரண்டாவது கேமிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த கேமை கைப்பற்றினார்.

 பின்னர் அடுத்தடுத்த கேம்களில் மலிஸின் சர்வீûஸ முறியடிக்க வாவ்ரிங்கா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 6-வது கேமில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தேவையில்லாமல் தூக்கியடித்து வீணடித்தார் வாவ்ரிங்கா. இதனால் அந்த கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடித்து சமநிலை பெறும் வாய்ப்பை இழந்தார்.

 அதன்பிறகு 8-வது கேமில் சிறப்பாக விளையாடிய வாவ்ரிங்கா, மலிஸ் செய்த சிறிய தவறுகளை சரியாகப் பயன்படுத்தி அவரது சர்வீûஸ முறியடித்து 4-4 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றார். பின்னர் 12-வது கேமில் கிடைத்த சில வாய்ப்புகளை வாவ்ரிங்கா தவறவிட்டபோதிலும், அந்த கேமை வென்று செட்டைக் கைப்பற்றினார்.

 இதில் மலிஸின் சர்வீஸ்களை மிகவும் மெதுவாக வந்ததும் வாவ்ரிங்காவின் வெற்றிக்கு காரணமாகும். இதன்மூலம் அவர் 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.

 நீடித்த போராட்டம்: பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் வாவ்ரிங்கா, மலிஸ் இருவருமே சிறப்பாக சர்வீஸ் போட்டனர். இரண்டாவது கேமில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை வாவ்ரிங்கா வீணடித்தார். அவர் அடிக்கடி பந்தை லைனுக்கு வெளியில் அடித்தது அவருக்கு பெரிய பின்னடைவாகும்.

 3-வது கேமில் வாவ்ரிங்கா சிறப்பான சர்வீஸ்களைப் போட்டபோதும், நேர்த்தியான ஷாட்களை அடிக்கத் தவறினார். அதை கணித்த மலிஸ், மைதானத்தில் முன்னேறி வந்து பந்தை மெதுவாக நெட் அருகில் தட்டிவிட்டு வாவ்ரிங்காவின் சர்வீûஸ முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

 அதன்பிறகு இருவரும் சிறப்பாக ஆடினாலும், தங்களின் சர்வீஸ்களை தக்க வைத்துக்கொண்டனர். இறுதியில் 10-வது கேமில் 6-4 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார் மலிஸ்.

 வெற்றி வசமானது: பின்னர் நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது செட்டில் ஆரம்பத்தில் இருந்தே வாவ்ரிங்கா அபாரமாக ஆடினார். இந்த செட்டின் 2-வது கேமில் மலிஸின் சர்வீûஸ முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் வாவ்ரிங்கா. இதையடுத்து வேகமாக ஆடிய அவர், மலிஸýக்கு கடும் நெருக்கடியை அளித்தார்.

 வாவ்ரிங்காவின் ஷாட்களை எதிர்கொள்ளத் தடுமாறினார் மலிஸ். இதையெல்லாம் சரியாகப் பயன்படுத்திய வாவ்ரிங்கா 5-வது கேமில் மலிஸின் சர்வீûஸ மீண்டும் முறியடித்தார். பின்னர் இறுதியில் 6-1 என்ற கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

 இந்த ஆட்டம் 2 மணிநேரம் 14 நிமிடங்கள் வரை நீடித்தது. சென்னை ஓபன் டென்னிஸ் பட்டத்தை வாவ்ரிங்கா இப்போது முதல்முறையாக வென்றுள்ளார். கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய வாவ்ரிங்கா, மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.