மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பரங்குன்றத்தில் மார்ச் 28ல் கைபாரம் நிகழ்ச்சி! சிறப்பம்சங்கள் என்ன?

திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழா பற்றி..

News image

திருப்பரங்குன்றம் - dps

Updated On :23 மார்ச் 2026, 7:45 am

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

அரோகரா கோஷம் வழங்கிடப் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்கிடச் சுவாமி தரிசனம் செய்தனர்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி 15 நாள்கள் கோலாகலமாக நடைபெறுகிறது.

கைபாரம் நிகழ்வின் சிறப்பம்சம்..

பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதையடுத்து தினமும் காலையிலும் இரவிலும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் வருகின்ற 28ஆம் தேதி கைபாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கோயிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப் பெருமான் தெய்வானையைப் பக்தர்களும் கோயில் சீர்பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச் சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது.

தொடர்ந்து விழாவில் வரும் ஒன்றாம் தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும், இரண்டாம் தேதி சூரசம்ஹாரமும், மூன்றாம் தேதி முருகப்பெருமானுக்குத் தங்க கிரீடம் சூட்டி நவரத்தினங்களால் செங்கோல் வழங்கும் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருவிழாவில் முத்தாய்ப்பாக அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் , 4 -ம்தேதி முருகப்பெருமான் தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைக் கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகிறது.

Summary

The Panguni Festival at the Arulmigu Subramaniya Swamy Temple in Thiruparankundram, Madurai, commenced today with great grandeur with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.