திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பிறகு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும், காலை 10 மணிக்கு சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.

சித்திரை முதல் நாளையொட்டி சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடி தீர்த்தவாரி நடந்தது.
சித்திரை முதல் நாளை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டு சிறப்புப் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சித்திரை விசு கனி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள் பிரகாரத்தில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சியை முன்னிட்டு கண்ணாடி முன்பு கனிகள் வைக்கப்பட்டிருந்ததை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
Summary
Thousands of devotees had darshan of the Lord in Tiruchendur on the occasion of the Chithirai Visukani Kanam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


