தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செப்பறை அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

அழகிய கூத்தர் கோயில் தேரோட்டம்

Updated On :1 ஜூலை 2025, 9:30 am

நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகில் முதல் நடராஜர் மூர்த்தி கோயில் கொண்டுள்ள செப்பறை திருத்தலமானது தாமிரபரணி தீர்த்தமாகக் கொண்டு பஞ்ச சபைகளில் முக்கியமான தாமிரபரணி சபையாக விளங்குகிறது.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆனி மாதமும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Summary

The azhagiya Koothar Temple procession in Sepparai: A large number of devotees participate!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.