2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நெல்லையப்பர் கோயில் தேர்கள் சுத்தப்படுத்தும் பணி; போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:08 pm

தினமணி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நெல்லையப்பர் கோவிலின் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர்  - காந்திமதியம்மாள் கோயிலின் நெல்லையப்பர் தேர் உள்ளிட்ட 5 தேர்களை தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தினர் . இதனால் ரத வீதிகளில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டன.

தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்மாள் திருக்கோவிலின் ஆனித் தேரோட்டம் வருகிற ஜூன் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது. 

இந்த ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வருகிற ஜூலை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகவும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராகவும் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் தேர் உள்ளது.

தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், காந்திமதி அம்மன் மற்றும் சுவாமி நெல்லையப்பர் தேர்களை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் முதல் கட்டமாக தேரைச் சுற்றி உள்ள  கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டு பேட்டை தீயணைப்புத் துறையினரால் வாகனங்கள் மூலம் ஐந்து தேர்களிலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தேர்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நான்கு ரத வீதிகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.