2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம்: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

தினமணி

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

புதுச்சேரி பாகூர் பகுதியில்1400 வருடங்கள் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு வேதாம்பிகை உடனுறை ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் மூலநாதருக்கு பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி மூலநாதர் வேதாம்பிகை திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ செந்தில்குமார், இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கர் வட்டாட்சியர் பிரித்திவிராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

Story image

அலங்கரிக்கப்பட்ட மூலநாதர் திருத்தேரில் வைக்கப்பட்டு திருத்தேரானது முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இத்திருத் தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.