தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்டம்: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :1 ஜூலை 2023, 10:42 am

புதுச்சேரி பாகூரில் எழுந்தருளி உள்ள ஶ்ரீ மூலநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

புதுச்சேரி பாகூர் பகுதியில்1400 வருடங்கள் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு வேதாம்பிகை உடனுறை ஸ்ரீ மூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் மூலநாதருக்கு பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி மூலநாதர் வேதாம்பிகை திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ செந்தில்குமார், இந்து அறநிலைத்துறை ஆணையர் சிவசங்கர் வட்டாட்சியர் பிரித்திவிராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

Story image

அலங்கரிக்கப்பட்ட மூலநாதர் திருத்தேரில் வைக்கப்பட்டு திருத்தேரானது முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இத்திருத் தேரோட்ட நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.