சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா.. நேரலையில்!

சனிப்பெயர்ச்சி விழாவினை, பொதுமக்களும் பக்தர்களும் வீட்டிலிருந்தே காணும் வகையில், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் யூடியூப்பில் நேரலை ஒளிபரப்பை செய்திருக்கிறது.

News image
திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி
Updated On :6 பிப்ரவரி 2024, 1:29 pm

தினமணி


காரைக்கால்: சனிப்பெயர்ச்சி விழாவினை, பொதுமக்களும் பக்தர்களும் வீட்டிலிருந்தே காணும் வகையில், திருநள்ளாறு கோயில் நிர்வாகம் யூடியூப்பில் நேரலை ஒளிபரப்பை செய்திருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாற்றில் இன்று மாலை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற சனிப்பெயர்ச்சி விழா-2023 உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்தே ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற யூடியூப் லிங்க் மூலம் பார்க்க  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 

YouTube video thumbnail

இந்த யூடியூப் லிங்க் மூலம்  பொதுமக்கள் அனைவரும் சனிப்பெயர்ச்சி நிகழ்வினைப் பார்த்து ஸ்ரீ சனீஸ்வர பகவான் அருள் பெற காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

வாக்கியப் பஞ்சாங்கப்படி, மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி, திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

அனைவராலும் நேரடியாகக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசனிபகவானை தரிசிக்க முடியாது என்பதால், கோயில் நிர்வாகம்,  நேரலையில் காணும்  ஏற்பாட்டினை செய்திருக்கிறது.

நளசக்கரவர்த்திக்கு ஏற்பட்ட தோஷம் விலக தர்பை காடாக இருந்த திருநள்ளாறுக்கு வந்து சுயம்புவாக தோன்றிய தர்பாரண்யேஸ்வரரை வணங்கி, தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டதால், அவருக்கு ஏற்பட்ட துன்பம் விலகி, அவர் இழந்ததையெல்லாம் மீட்டதாக வரலாறு. இக்கோயிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இன்று சனிப்பெயா்ச்சியின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நடக்கும் விசேஷ அபிஷேக, ஆராதனைகளை ஏராளமானோர் தொலைக்காட்சி வாயிலாகவும், யூடியூப் வாயிலாகவும் கண்டு பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.