பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சிறுவாபுரி கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

News image
சிறுவாபுரி முருகன்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:38 am

தினமணி

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை தரிசனம் செய்து வந்தாலும், செவ்வாய்க்கிழமைகளில் முருக பக்தர்கள் பன்மடங்காக வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்வது வழக்கம். 

இந்நிலையில் வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், முக்கிய கோயில்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் சிறுவாபுரி பாலாமுருகன் கோயிலில் கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை மூடப்படுகிறது. 

சாந்தி பூஜைகள் செய்யப்பட்ட பின் இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோயில் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.