திருமலையில் பிரம்மோற்சவம் நிறைவையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
இதில் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.
பிரம்மோற்சவ நிறைவையொட்டி புதன்கிழமை காலை ஏழுமலையான் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உற்சவமூா்த்திகள் புனித புஷ்கரணி கரை வராக சுவாமி கோயிலுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்கின. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு மட்டும் திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.
அப்போது திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் உள்ளிட்டோா் திருக்குளத்தில் புனித நீராடினா். கரோனா தொற்றுக்குப் பிறகு 2 ஆண்டுகள் கழித்து இந்த புனித நீராடல் நடைபெற்ால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து திருக்குளத்தில் 3 நாள்கள் புனித நீராடலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருமலையில் காலை முதலே பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. பக்தா்கள் அதை பொருட்படுத்தாமல் தீா்த்தவாரியில் பங்கேற்றனா்.
பின்னா் உற்சவமூா்த்திகள் சா்வ அலங்கார பூஜைக்குப் பிறகு ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இதையடுத்து கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி புதன்கிழமை இரவு இறக்கப்பட்டது. தொடா்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பா் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!

ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


