‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விடுதலை

விடுதலை - சமன் நாஹல்; தமிழில்: பிரேமா நந்தகுமார்; பக்.384; ரூ.200; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:11 am

பிரேமா நந்தகுமார்

விடுதலை - சமன் நாஹல்; தமிழில்: பிரேமா நந்தகுமார்; பக்.384; ரூ.200; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

புகழ்பெற்ற எழுத்தாளர் சமன் நாஹல், "ஆஸôதி' என்ற பெயரில் எழுதிய நாவலின் தமிழ் வடிவம். சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த தேசப் பிரிவினையின்போதும் உருவான அரசியல் மாற்றங்களைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்டிருக்கும் இந்த நாவல், சாகித்திய அகாதெமி விருது பெற்றது.

நாட்டை பிளவுபடுத்தியதால் விளைந்த ரணங்களையும், வேதனைகளையும் கதையினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

சுதந்திரத்துக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் லாலா கன்ஷிராம் என்ற தானிய வியாபாரியைச் சுற்றி கதைக் களம் நகர்கிறது. தேசப் பிரிவினைக்குப் பிறகு அவர், தனது குடும்பத்தினரை இழந்து சொந்த நாட்டிலேயே அகதியாக மாறிய நிலைமையை நூலாசிரியர் அரசியல் பின்னணியுடன் எடுத்துரைத்துள்ளார்.

பாகிஸ்தான் தனி நாடாக உருவான பிறகு, அங்கிருந்து தில்லியில் வாழ விரும்பி வந்தவர்கள் ஊடுருவல்காரர்களைப் போல நடத்தப்பட்டது, பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது, மதரீதியான மோதல்களில் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டது என கடந்த காலத்தின் கசப்பான சில உண்மைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கங்கையாறு, காவிரியாறு, யமுனையாறு ஆகியவற்றுடன் சேர்ந்து பிரிவினையின்போது ரத்த ஆறும் ஓடியதுதான் நம் தேசத்தின் வரலாறு என்பதைப் பதிவு செய்யும் மகத்தான நாவல், விடுதலை. எளிமையான தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.