‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி-8

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி-8 - சிவசங்கரி; பக். 344; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:10 am

சிவசங்கரி

சிவசங்கரி குறுநாவல்கள் தொகுதி-8 - சிவசங்கரி; பக். 344; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; )044- 2434 2810.

எழுத்தாளர் சிவசங்கரி தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இதுவரை 150 சிறுகதைகள், 30 நாவல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகளில் "ஒரு மனிதனின் கதை' "நண்டு' "அம்மா சொன்ன கதைகள்' ஆகியவை இன்றும் அவரது எழுத்துக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

பொதுவாக அவருடைய கதைகளில் சமூகச் சிந்தனைகள் மேலோங்கி நிற்கின்றன. போதைப் பொருளுக்கு அடிமையாவது, மதுவுக்கு அடிமையாவது ஆகியவற்றைத் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் தொடர்ந்து கண்டித்து வருகிறார். முதுமை சார்ந்த பிரச்னைகளிலும் அக்கறையுள்ளவர். இவை எல்லாமும் அவருடைய குறுநாவல் தொகுப்பான இந்நூலிலும் பிரதிபலிக்கின்றன.

இந்தத் தொகுதியில் "சியாமளா', "மண் குதிரைகள்', "கண் கெட்ட பின்', "குழப்பங்கள்', "இவளும் அவளும்' "தீர்வு' ஆகிய ஆறு குறுநாவல்கள் இடம் பெற்றுள்ளன.

"சியாமளா'வில் மனிதனுக்கும், விலங்குக்கும் இடையிலான உறவை உயிரோட்டமாக வழங்கியுள்ளார்.

இந்த குறுநாவல்கள் அனைத்தும் வெவ்வேறு கதைக் களன்களைக் கொண்டுள்ளன.

"மண் குதிரையில் கல்யாணியின் பாத்திரம் உண்மையில் நம்மை அடுத்தது என்ன? என்ற ஆவலைத் தூண்ட வைக்கிறது. அவள் ஒவ்வொரு தருணத்திலும் கணவனுக்காக ஏன் பயப்பட வேண்டும்...? தேவையில்லையே என்பதைக் கதையின் இறுதியில் கூறி நமக்கு ஆறுதல் தருகிறார். குறிப்பிடத்தக்க சிறந்த குறுநாவல்களின் தொகுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.