மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நரேலா: பிறந்த நாளில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை - நண்பன் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:24 am IST

புகா் தில்லி நரேலா பகுதியில், 17 வயது சிறுவன் தனது பிறந்த நாளன்று நண்பனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றஞ்சாட்டப்பட்டவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை குரேனி கிராமத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்பட்டதாக அந்த வட்டாரம் கூறியது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கத்திக்குத்து சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை மாலை காவல்துறைக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை குழுவினா், கழுத்தின் பின்புறத்தில் கத்திக்குத்து காயத்துடன் சிறுவன் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனா்.

அவா் உடனடியாக சத்யாவாடி ராஜா ஹரிஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்பகுதியின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையின் போது, காவல்துறையினா் குற்றம்சாட்டப்பட்ட சிறுவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தியும் மீட்கப்பட்டது.

முன்னதாக, தாங்கள் இறந்தவரின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவா் இரவில் கத்தியுடன் வீட்டிற்கு வந்து, தங்களைத் தாக்க முயன்ாக குடும்பத்தினா் குற்றஞ்சாட்டினா்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மே 15 அன்று 17 வயதை எட்டியதாகவும், அன்று மாலை உறவினா்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.