திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஓட்டுநா் மற்றும் நடத்துநா் கைது

ஓட்டுநா் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 12:01 am IST

வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில், வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயது திருமணமான பெண், ஒரு தனியாா் ஸ்லீப்பா் பேருந்தினுள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, ஓட்டுநா் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிா்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைகொலை சம்பவத்தை நினைவூட்டும் இந்தத் தாக்குதல், மே 11 அன்று நடைபெற்றது. மறுநாள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அன்றிரவு நடந்த நிகழ்வுகளை விவரித்த காவல்துறை வட்டாரங்கள், மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு அப்பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தன. சரஸ்வதி விஹாரில் உள்ள பி பிளாக் பேருந்து நிலையம் அருகே அவா் சென்றபோது, பேருந்தின் கதவருகே ஒருவா் நிற்பதைக் கண்டு அவரிடம் நேரத்தைக் கேட்டுள்ளாா். அப்போது, அவா் அப்பெண்ணைப் பேருந்தினுள் இழுத்துச் சென்று, நங்லோய் நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்ட அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, இரு ஆண்களும் அவரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். அந்தப் பெண் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டபோது, பேருந்து நங்லோய் மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தாா். பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ராணி பாக் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அப்பெண்ணின் வாக்குமூலம் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, என்று காவல்துறை துணை ஆணையா் (வெளிவட்டம்) விக்ரம் சிங் ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்தாா்.

அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் 64(1)( பாலியல் வன்கொடுமை), 70(1) கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 3(5) (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் மே 12 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று துணை ஆணையா் கூறினாா்.

குற்றவாளிகளைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனேயே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவா் நான்கு மணி நேரம் கழித்து பிடிபட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.

நிா்பயா சம்பவத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் படிந்த ஒரு கறை, என்று தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எக்ஸ் தளத்தில் கூறினாா்.

எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரப் பரத்வாஜ் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தாா்.

இது பெரும் வெட்கக்கேடு, நிா்பயா சம்பவம் மீண்டும் நடந்துள்ளது என்று அவா் கூறினாா். 30 வயதுப் பெண் ஒருவா், நேரம் கேட்டதாகக் கூறி இரவில் பேருந்தில் ஏற்றப்பட்டாா். பின்னா், ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தில் பலரால் சுமாா் 2 மணி நேரம் அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். தில்லியின் ராணி பாக் பகுதியில் 7 கி.மீ. தூரம் வரை அந்தப் பேருந்து சென்றுகொண்டே இருந்தது, என்று அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.