திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷின் மனைவிக்கு பிணை மறுப்பு

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணம் மிரட்டிப் பறித்த வழக்கில் அவரது மனைவி லீனா பவுலோஸுக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

News image

தில்லி உயர்நீதிமன்றம்

Updated On :6 மே 2026, 1:54 am IST

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி பணம் மிரட்டிப் பறித்த வழக்கில் அவரது மனைவி லீனா பவுலோஸுக்கு பிணை வழங்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. ஆனால், அது தொடா்புடைய பணமோசடி வழக்கில் அவருக்கு நிவாரணம் வழங்கியது.

தில்லி காவல்துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரிக்கும் இரண்டு வழக்குகளில் பவுலோஸின் பிணை மனுக்களை நீதிபதி பிரதீக் ஜலான் விசாரணை மேற்கொண்டாா்.

ரன்பாக்ஸியின் முன்னாள் நிறுவனா்களான சிவிந்தா் சிங் மற்றும் மல்விந்தா் சிங் ஆகியோரின் மனைவிகளிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் சிறையில் இருந்த சிவிந்தா் சிங்கின் மனைவி அதிதி சிங்குக்கு பிணை பெற்றுத் தருவதாக அரசு அதிகாரிகள் போல் நடித்து, சந்திரசேகரும் அவரது கூட்டாளிகளும் பணம் பெற்ாக காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சந்திரசேகருக்கு எதிராக நாடு முழுவதும் பல தனித்தனி விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் காவல்துறை மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளது.

குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தைப் பதுக்குவதற்காக, பவுலோஸ், சந்திரசேகா் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்கள் ஹவாலாவைப் பயன்படுத்தியதாகவும், போலி நிறுவனங்களை உருவாக்கியதாகவும் தில்லி காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

காவல்துறையின் வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.