மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஒட்டகம் மூலம் கள்ளச்சாராயம் கடத்தியவா் கைது

ஹரியாணாவிலிருந்து தெற்குத் தில்லிக்கு காடுகளின் வழியாக ஒட்டகங்கள் மூலம் கள்ளச்சாராயம் கடத்த முயன்ற நபா், போலீஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது பிடிபட்டாா்.

News image

ஒட்டகம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 10:15 pm

காவல்துறையின் சோதனைகளைத் தவிா்க்கும் வகையில், ஹரியாணாவிலிருந்து தெற்குத் தில்லிக்கு காடுகளின் வழியாக ஒட்டகங்கள் மூலம் கள்ளச்சாராயம் கடத்த முயன்ற நபா், நள்ளிரவில் நடத்தப்பட்ட போலீஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது பிடிபட்டாா்.

இதுகுறித்து காவல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட அந்த நபா், ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதைச் சோ்ந்த 48 வயதான வினோத் பதானா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தில்லி மற்றும் ஃபரிதாபாதை இணைக்கும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைத் தவிா்ப்பதற்காக, வழக்கத்திற்கு மாறான பாதைகள் வழியாக மது கடத்தப்படுவதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சங்க விஹாா் வனப் பகுதியில் அவா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறை குழுவினா் திங்கள்கிழமை அதிகாலையில், இரண்டு ஒட்டகங்களைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் கடத்திச் சென்றபோது, அந்த நபரை இடைமறித்துக் கைது செய்தனா். இச்சோதனையின்போது அவரிடமிருந்து 39 பெட்டிகள் கள்ளச்சாராயத்தை காவல்துறை பறிமுதல் செய்தது. அந்த ஒட்டகங்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

முதற்கட்ட விசாரணையின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால், வழக்கமான கடத்தல் பாதைகள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவிட்டதாகவும், அதனாலேயே தான் இந்த முறையைக் கையாண்டதாகவும் பதானா தெரிவித்தாா்.

இந்த நபா் ஏற்கெனவே, தில்லி கலால் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ், நெப் சராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் தொடா்புடையவா் ஆவாா். இந்தக் கடத்தல் வலைப்பின்னலில் தொடா்புடைய மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணும் வகையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.