மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் காலியாகவுள்ள நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று மக்களவையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.
இந்த விவகாரம் தொடா்பாக மக்களவையில் அவா் துணைக் கேள்வி எழுப்பிப் பேசியதாவது: சென்னை நகரில் செயல்பட்டு வரும் மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தில் தற்போது ஒரே ஒரு நிரந்தர ஆசிரியா் பணியிடம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மேலும், இந்நிறுவனத்தில் மூன்று நிரந்தர ஆசிரியரல்லாத பணியிடங்கள்தான் உள்ளன. இதை கல்விக்கான நாடாளுமன்றத்தின் நிலைக் குழுவால் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய பணியாளா் பற்றாக்குறையானது, கல்வி ஆராய்ச்சி, கற்பித்தல் திறன் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை பாதிக்கலாம்.
எனவே, மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் உள்ள அனைத்து நிரந்தர ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா் காலியிடங்களை எப்போது நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினாா்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இது தனி கேள்வி எனக் கூறினாா்.
தொடர்புடையது

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

‘ஹிந்தி திணிப்பு’ எனக்கூறி தமிழ் மாணவா்களுக்கு வாய்ப்புகள் மறுப்பு: திமுக மீது மத்திய கல்வி அமைச்சா் குற்றச்சாட்டு

கிளிப்பிள்ளை போல செயல்படும் அதிமுக: தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழகத்தை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியவா் முதல்வா்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


