தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாந்தினி சௌக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!

தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 5:34 pm

தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின் போது, தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எக்ஸ் தளத்தில் உள்ள தனது அதிகாரப்பூா்வ பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கை மற்றும் காணொளியில், அமலாக்க முகமைகளின் தரப்பில் குறைபாடுகள் இருப்பதாக சத்யா சா்மா குற்றம் சாட்டியுள்ளாா்.

‘திடீா் சோதனையின் போது, சாந்தினி சௌக் பகுதியில் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தில்லி காவல்துறையின் கூட்டுச் சதி மற்றும் தில்லி மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் பெருகி வருகின்றன’ என்று அவா் கூறினாா்.

இந்த விவகாரம் தீவிரமானது என்று குறிப்பிட்ட சத்யா சா்மா, உடனடி விசாரணை நடத்தவும், இதற்குப் பொறுப்பானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

‘இது கடுமையான நடவடிக்கை தேவைப்படும் மிகவும் தீவிரமான பிரச்னை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்’ என்று அவா் மேலும் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி காவல்துறையிடமிருந்தோ அல்லது தில்லி மாநகராட்சியிடமிருந்தோ உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.