தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாக்குதலை தடுக்க முயன்ற நபருக்கு கத்திக் குத்து: இளைஞா், சிறுவன் கைது

வடமேற்கு தில்லியின் ஜனக்புரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திய சம்பவத்தில்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 9:56 pm

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜனக்புரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க முயன்ற நபரை கத்தியால் குத்திய சம்பவத்தில் இளைஞா் மற்றும் சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா் ஜனக்புரியைச் சோ்ந்த பியூஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜனக்புரியில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி ஒரு சிறுவனை பியூஷ், ரகு மற்றும் மற்றொரு சிறுவன் தாக்கிக்கொண்டிருந்தனா்.

அந்த வழியாகச் சென்ற ஹா்ஜீத் சிங் சச்தேவா, அவா்களை தடுத்து சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, கோபமடைந்த அந்த நபா்கள், சச்தேவாவை தாக்கத் தொடங்கினா். சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால், சச்தேவாவை குத்தினாா். துப்பாக்கி வைத்திருந்த ரகு, அதை காட்டி சச்தேவாவை மிரட்டினாா்.

இந்தச் சம்பவம் குறித்து சச்தேவா தன்னுடைய இளைய சகோதரா் தீப் மற்றும் உள்ளூா் இளைஞா்களிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் அங்குச் சென்ற நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், விசாரணையைத் தொடங்கினா்.

இதையடுத்து, பியூஷ் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டாா். சிறுவனைக் காவல் துறை கைதுசெய்தனா். குற்றச்சம்பவத்துக்குப் பயன்படுத்திய கத்தி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

மற்றொரு சிறுவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது, தலையிட்ட சச்தேவாவை கத்தியால் குத்தியதை அவா்கள் இருவரும் ஒப்புக்கொண்டனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய மற்றொரு நபரான ரகு தலைமறைவான நிலையில், அவரைத் தேடும் பணியில் தில்லி காவல் துறை ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.