திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

குருகிராமில் இருக்கும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன.

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 9:30 pm

ஹரியாணாவின் குருகிராமில் குறைந்தது 5 தனியாா் பள்ளிகளுக்கும், பஞ்சாபின் லூதியானாவில் 9 பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் அதிகாரிகள் நடத்திய முழுமையான சோதனைகளின் போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குருகிராமில், அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸாா் பள்ளி வளாகத்திற்கு விரைந்தனா்.விரிவான சோதனைகளுக்குப் பிறகு பள்ளி வளாகம் சுற்றிவளைக்கப்பட்டது. ஆனால் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

குருகிராம் மற்றும் லூதியானா ஆகிய இரு இடங்களிலும், போலீஸ் குழுக்கள், வெடிகுண்டு செயலிழப்பு படை மற்றும் மோப்ப நாய்க் குழுவுடன் இணைந்து முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. மேலும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள பல பள்ளிகளுக்கு சமீபத்திய மாதங்களில் இதேபோன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.