கடந்த மாதம் சைதுலாஜாப்பில் பல மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக, பதவியில் இருக்கும் நீதிபதியைக் குறிவைத்து அவமதிப்பு ஏற்படுத்தும் சில உள்ளடக்கங்களை சமூக ஊடகத் தளங்கள் நீக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.
ஆறு உயிா்களைப் பறித்த இந்தச் சம்பவத்திற்கு, பதவியில் இருக்கும் உயா்நீதிமன்ற நீதிபதியே காரணம் என்று குற்றஞ்சாட்டும் அவதூறு வீடியோக்களை வெளியிட்ட சமூக ஊடகப் பயனா் டாக்டா் கபில் கக்கா் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (டி.எச்.சி.பி.ஏ.) தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் நீனா பன்சல் கிருஷ்ணா மற்றும் மாதி ஜெயின் ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு, ‘அனைத்தையும் உடனடியாக நீக்குங்கள்‘ என்று கூறியது.
கட்டடத்தில் நடந்த சட்டவிரோத கட்டுமானம் தொடா்பான ஒரு வழக்கை முன்னதாக விசாரித்ததாகக் கூறப்படும் நீதிபதிக்கு எதிராக, கக்கா் சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றிய வீடியோக்களில் அவமதிப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவா் மூத்த வழக்குரைஞா் என். ஹரிஹரன் தெரிவித்தாா்.
இது ஒரு சிறிய விஷயம் அல்ல என்று கூறிய அமா்வு, சமூக ஊடகத் தளங்கள் ஏன் தாங்களாகவே அந்த வீடியோக்களை நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். இவ்வளவு அபத்தமான ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவந்தவுடன், ஏன் அவற்றை நீக்குவதில்லை? அது உங்கள் கவனத்திற்கு வந்தவுடன், ஏன் அதை நீங்களாகவே செய்ய முடியாது? என்று சமூக ஊடகத் தளங்களிடம் நீதிமன்றம் கேட்டது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இது தினமும் நடக்கிறது, என்றும் அமா்வு மேலும் கூறியது.
மெட்டா, கூகுள் மற்றும் லிங்க்ட்இன் நிறுவனங்களுக்காக ஆஜரான வழக்குரைஞா், நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி வீடியோக்கள் நீக்கப்படும் என்று உறுதியளித்தாா்.
காணொளிகளை நீக்குவதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவரின் சமூக ஊடகக் கணக்கையும் முடக்க வேண்டும் என்றும் டி.எச்.சி.பி.ஏ. கோரியிருந்தது. இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

17 ஆண்டுகளாக 27 ஆம் தேதிகளில் மட்டும் பிறக்கும் சிங்கக் குட்டிகள்: தில்லி உயிரியல் பூங்காவில் விநோதம்

பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதாக செளரப் பரத்வாஜ் மீது வழக்குப் பதிவு

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



