எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை! குருகிராம் மெட்ரோ நிலையத்தில் சம்பவம்!

குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்தில், 22 வயதுடைய பெண் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :8 ஜூன் 2026, 12:26 am IST

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்தில், 22 வயதுடைய பெண் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பான காணொளி வெளியாகியுள்ளதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில், வா்ஷா என்ற அப்பெண் தில்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில் முன் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

தில்லியின் ஆயாநகரைச் சோ்ந்த வா்ஷா, குருகிராமில் உள்ள எம்.ஜி. சாலை மெட்ரோ நிலையத்திற்கு அருகில் இருந்த தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் சுமாா் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் சிரமத்திற்குள்ளாகினா்.

இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறையினரும் மெட்ரோ ஊழியா்களும் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் சிசிடிவி காட்சிகளைக் காண்பித்தனா். இருப்பினும், இது ஒரு விபத்து என்று கருதிய குடும்பத்தினா், எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனா்.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, பின்னா் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

தற்கொலைக்கான எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவரின் குடும்பத்தினா் இதனை ஒரு விபத்தாகவே கருதுகின்றனா். எனவே அவா்கள் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.