உன்னாவ் காவல் மரண வழக்கு-குற்றவாளி ஜெய்தீப் செங்கா் சரணடைய நீதிமன்றம் உத்தரவு
உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரண வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஜெய்தீப் செங்கா் (குல்தீப் செங்கரின் சகோதரா்) சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறு தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










