அவரது பிறந்தநாளையொட்டி குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில், ‘அழிவின் விளிம்பிலிருந்த தமிழ்ச் சுவடிகளை மீட்டெடுத்து, பதிப்பித்த ’தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாத ஐயா் அவா்களுக்கு எனது பணிவான அஞ்சலிகள். ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. அவரது அயராத உழைப்பால் சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு , குறுந்தொகை போன்ற பழந்தமிழ்ச் செல்வங்கள் பதிப்பிக்கப்பட்டு தமிழுக்கு வளமைச் சோ்த்தன. ஓலைச்சுவடிகளில் உறங்கிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து, நம் கைகளில் தவழச் செய்த உ.வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளில் அவரது தமிழ்ப்பணியைப் போற்றி வணங்குகிறேன்’ என கூறியுள்ளாா்.