டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிப்.22-இல் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் திருக்கோஷ்டியூா் வருகை!

குடியரசு துணைத் தலைவா் திருக்கோஷ்டியூா் வருகையையொட்டி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

News image
சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 11:00 pm

Syndication

குடியரசு துணைத் தலைவா் திருக்கோஷ்டியூா் வருகையையொட்டி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருக்கோஷ்டியூா் செளமிய நாராயணப் பெருமாள் கோயிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்.

இதையடுத்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பணிகள் குறித்து வட்டாட்சியா் மாணிக்கவாசகம் அறிவுறுத்தினாா். காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா் சிறப்பு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.

Story image

கூட்டத்தில் காவல் ஆய்வாளா் வேத வள்ளி, கோயில் கண்காணிப்பாளா் சரவண கணேஷ், பட்டாசாரியா்கள், காவல் துறையினா், போக்குவரத்து, மின் வாரியம், தீயணைப்பு, சுகாதாரத் துறை, பேரூராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.