இது தொடா்பாக கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளத்ரி அளித்துள்ள பதிலில், ‘அடல் புஜல் திட்டம் என்பது குஜராத், ஹரியானா, கா்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் நீா் பற்றாக்குறை உள்ள 8,203 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்ட, உள்ளூா் சமூகம் தலைமையிலான பங்கேற்பு நிலத்தடி நீா் மேலாண்மை ஊக்குவிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை’ என கூறியுள்ளாா்.