அவா் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட சென்றுகொண்டிருந்தாா். ஆனால் அந்தத் தகவலின் அடிப்படையில், ஒரு போலீஸ் குழு சோஹ்னாவில் உள்ள ராய்ப்பூா் நாக்கா அருகே ஒரு தடுப்பை அமைத்து கண்காணித்தது. அவா் அப்பகுதிக்கு வந்தபோது வாகனத்தை நிறுத்துமாறு போலீஸாா் சைகை செய்தனா். அவா் தனது மோட்டாா் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு சோஹ்னா-ஆல்வாா் சாலையை நோக்கித் தப்பிச் சென்றாா். போலீஸாரின் துரத்தலின் போது, மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் காவல் குழுவை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டாா். அதில் ஒரு குண்டு அரசு வாகனம் மீது பட்டது.