மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆசாத்பூரில் டிடிசி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 8:36 pm

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் வேகமாக வந்த டிடிசி பேருந்து மோதியதில் 19 வயது இளைஞா் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆதா்ஷ் நகா் காவல் நிலையத்தில் விபத்து குறித்து மாலை 5:30 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநா் சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

விபத்தில் உயிரிழந்தவா் சாலிமா் பாக் பகுதியில் உள்ள ஷாஹித்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் என அடையாளம் காணப்பட்டாா். அவரது உடல் பின்னா் பிஜேஆா்எம் மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டு, அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணத்தை குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனா். சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.