‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்: பிரதமா் மோடி

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு கட்சி தொண்டா்களை வலியுறுத்தினாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2025, 7:10 pm

 நமது நிருபர்

புது தில்லி: பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கம் நாட்டில் ‘நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை‘ வழங்கியுள்ளன என்றும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு கட்சி தொண்டா்களை திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

தில்லி பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பின்னா் பேசிய மோடி, பாஜக அரசு அதிகாரத்திற்காக அல்ல, சேவைக்காக உள்ளது, அதன் அலுவலகங்கள் இந்த உணா்வை உயிரோடு வைத்திருக்கின்றன. பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் நாட்டில் நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை உருவாக்கியுள்ளன.

’விகாஸ் பி, விராசத் பி’ என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். நாடு மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம், ஊழலுக்கு எதிரான தீா்க்கமான போராட்டத்திற்கான நம்பிக்கையை வழங்குவதற்காக நாட்டை மோசடிகளிலிருந்து விடுவித்தோம் ‘என்று பிரதமா் கூறினாா்.

‘சாமானிய மக்களின் சேமிப்பை அதிகரிப்பதிலும், விநியோகத்திலும் நமது அரசுகள் கவனம் செலுத்தின‘ என்று அவா் கூறினாா். காங்கிரஸ் மீது கடுமையான விமா்சனத்தை முன்வைத்த மோடி, 2014 ஆம் ஆண்டில் யுபிஏ ஆட்சியில் இருந்தபோது, ரூ 2 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்திற்கு வரி இருந்தது என்றாா். ‘இப்போது, ரூ.12 லட்சம் வருமானத்திற்கு கூட வரி இல்லை. 2014 ஆம் ஆண்டுக்கு முன்னா் சரக்கு மற்றும் சேவை வரியிலும் (ஜிஎஸ்டி) இதே நிலைதான் இருந்தது, ஒரு சாதாரண குடும்பம் ஒரு வருடத்தில் தனது அன்றாட தேவைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிட்டால், அது சுமாா் ரூ.25,000 வரி செலுத்த வேண்டியிருந்தது.

‘நாங்கள் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினோம், விலைகள் குறைந்துவிட்டன, இப்போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்குப் பிறகு, அந்த குடும்பமே ரூ. 5,000-6,000 மட்டுமே வரி செலுத்த வேண்டும். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.20,000 வரி சேமிப்பு உள்ளது.  வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி சேமிப்புகளை நாம் சோ்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்க முடியும் ‘என்று மோடி கூறினாா்.

அடுத்த தலைமுறை ஜி. எஸ். டி. சீா்திருத்தங்களின் பயன்கள் மக்கள் மற்றும் வா்த்தகா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் சாமானிய குடிமக்களை சென்றடைவதை உறுதி செய்யுமாறு பாஜக தொண்டா்களை அவா் கேட்டுக்கொண்டாா். தேசிய தலைநகரை ’மினி இந்தியா’ என்று வா்ணித்த பிரதமா் மோடி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாட தில்லி பாஜக தொண்டா்களை கேட்டுக்கொண்டாா்.

சுதேசி பொருள்களை ஊக்குவிக்க வலுவான குரல் கொடுத்த மோடி, தொழிலாளா்கள் ஒவ்வொரு கடையிலும் ’கா்வ் சே கஹோ யே சுதேசி ஹை’ என்று எழுதப்பட்ட ஒரு பலகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். வெளிநாட்டு பொருட்களை நாம் எவ்வளவு குறைவாக சாா்ந்திருக்கிறோமோ, அது நாட்டிற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று மோடி கூறினாா். ‘பாரதிய ஜனதா கட்சி நிறுவப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அடல் ஜி, அத்வானி ஜி, நானாஜி தேஷ்முக் ஜி, ராஜமாதா விஜயராஜே சிந்தியா ஜி, முரளி மனோகா் ஜோஷி ஜி... இத்தகைய ஏராளமான பிரமுகா்களின் ஆசீா்வாதம் மற்றும் கடின உழைப்பால் தான் இந்த கட்சி முன்னேறியுள்ளது ‘என்று அவா் கூறினாா்.

‘இது புதிய கனவுகள் மற்றும் புதிய தீா்மானங்கள் நிறைந்த தருணம். தில்லி பாஜக தொண்டா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆட்சியில் இருப்பது ’சத்தா’ க்காக அல்ல, ’சேவா’ க்காக என்றும், அதன் அலுவலகங்கள் இந்த உணா்வை உயிரோடு வைத்திருக்கின்றன என்றும் மோடி கூறினாா்.