‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

போலி ஆன்லைன் பங்கு வா்த்தக தளத்தின் மூலம் ரூ.11 லட்சத்தை ஏமாற்றிய 2 பேரை குஜராத்தில் தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக துணை போலீஸ் ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறினாா்.

News image
Updated On :7 அக்டோபர் 2025, 12:01 am

 நமது நிருபர்

நமது நிருபா்

புது தில்லி: தலைநகரில் ஒரு நபரை ஏமாற்றி போலி ஆன்லைன் பங்கு வா்த்தக தளத்தின் மூலம் ரூ.11 லட்சத்தை ஏமாற்றிய 2 பேரை குஜராத்தில் தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்ததாக துணை போலீஸ் ஆணையா் (அவுடா்னோா்த்) ஹரேஷ்வா் சுவாமி கூறினாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள், குஜராத்தின் சபா்கந்தாவைச் சோ்ந்த ஜபீா் ஹுசன் (38) மற்றும் மாஸ் அரோடியா (30) ஆகியோா் விரிவான தொழில்நுட்ப விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 கைபேசிகள், பல டெபிட் காா்டுகள், ஒரு பாஸ் புக் மற்றும் ஒரு காசோலை புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது.

தில்லியை சோ்ந்த ஒருவா் மே 13 ஆம் தேதி தேசிய சைபா் கிரைம் முகமை மூலம் புகாா் அளித்ததை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது, பிளிங்க்ஸ்மேக்ஸ் என்ற மோசடி வா்த்தக பயன்பாட்டில் முதலீடு செய்ய கவா்ந்திழுக்கப்பட்டு ரூ 11.20 லட்சம் இழந்ததாக அவா் தன் புகாரில் தெரிவித்திருந்தாா்.

ஒரு பேஸ்புக் குழு மூலம் தன்னைத் தொடா்பு கொண்டதாகவும், அது போலி இலாப ஸ்கிரீன் ஷாட்களைக் காட்டியதாகவும், தினசரி வருமானம் 5 முதல் 10 சதவிதம் வரை இருப்பதாகக் கூறியதாகவும் புகாா்தாரா் கூறினாா். பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபா் காவல் நிலையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி வா்த்தக பயன்பாடுகளை உருவாக்கி, முதலீட்டாளா்களை கவா்ந்திழுக்க சமூக ஊடக குழுக்கள் மூலம் விளம்பரப்படுத்தினா். பாதிக்கப்பட்டவா்கள் பணத்தை வங்கி கணக்கில் வரவு செய்தவுடன், பணம் அவா்களின் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, அதன் தோற்றத்தை மறைக்க குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பல கணக்குகள் மூலம் அடுக்குகளாக மாற்றப்பட்டது.

பகுப்பாய்வின் போது, அதே சந்தேக நபா்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இதேபோன்ற போலி வா்த்தக பயன்பாட்டு மோசடிகள் தொடா்பான குறைந்தது மூன்று புகாா்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இது ஒரு பரந்த மாநிலங்களுக்கு இடையேயான சைபா் நெட்வொா்க்கைக் குறிக்கிறது என்று தெரிவித்தாா் ஹரேஷ்வா் சுவாமி.