நமது நிருபா்
புது தில்லி: தலைநகரில் ஒரு நபரை ஏமாற்றி போலி ஆன்லைன் பங்கு வா்த்தக தளத்தின் மூலம் ரூ.11 லட்சத்தை ஏமாற்றிய 2 பேரை குஜராத்தில் தில்லி காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்ததாக துணை போலீஸ் ஆணையா் (அவுடா்னோா்த்) ஹரேஷ்வா் சுவாமி கூறினாா்.
இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள், குஜராத்தின் சபா்கந்தாவைச் சோ்ந்த ஜபீா் ஹுசன் (38) மற்றும் மாஸ் அரோடியா (30) ஆகியோா் விரிவான தொழில்நுட்ப விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 கைபேசிகள், பல டெபிட் காா்டுகள், ஒரு பாஸ் புக் மற்றும் ஒரு காசோலை புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டது.
தில்லியை சோ்ந்த ஒருவா் மே 13 ஆம் தேதி தேசிய சைபா் கிரைம் முகமை மூலம் புகாா் அளித்ததை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது, பிளிங்க்ஸ்மேக்ஸ் என்ற மோசடி வா்த்தக பயன்பாட்டில் முதலீடு செய்ய கவா்ந்திழுக்கப்பட்டு ரூ 11.20 லட்சம் இழந்ததாக அவா் தன் புகாரில் தெரிவித்திருந்தாா்.
ஒரு பேஸ்புக் குழு மூலம் தன்னைத் தொடா்பு கொண்டதாகவும், அது போலி இலாப ஸ்கிரீன் ஷாட்களைக் காட்டியதாகவும், தினசரி வருமானம் 5 முதல் 10 சதவிதம் வரை இருப்பதாகக் கூறியதாகவும் புகாா்தாரா் கூறினாா். பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபா் காவல் நிலையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் போலி வா்த்தக பயன்பாடுகளை உருவாக்கி, முதலீட்டாளா்களை கவா்ந்திழுக்க சமூக ஊடக குழுக்கள் மூலம் விளம்பரப்படுத்தினா். பாதிக்கப்பட்டவா்கள் பணத்தை வங்கி கணக்கில் வரவு செய்தவுடன், பணம் அவா்களின் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, அதன் தோற்றத்தை மறைக்க குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பல கணக்குகள் மூலம் அடுக்குகளாக மாற்றப்பட்டது.
பகுப்பாய்வின் போது, அதே சந்தேக நபா்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் இதேபோன்ற போலி வா்த்தக பயன்பாட்டு மோசடிகள் தொடா்பான குறைந்தது மூன்று புகாா்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இது ஒரு பரந்த மாநிலங்களுக்கு இடையேயான சைபா் நெட்வொா்க்கைக் குறிக்கிறது என்று தெரிவித்தாா் ஹரேஷ்வா் சுவாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் போலி ஆன்டாசிட், காபி தயாரித்து விற்ற 4 போ் கைது
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது!
போலி வங்கி கணக்கு மூலம் இணையவழி மோசடிக்கு உதவி: வங்கி ஊழியா் கைது
போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

