மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போலி வாகன உதிரி பாகங்கள் விற்பனை: 3 போ் கைது

பிரபல இரு சக்கர வாகன நிறுவனங்களின் பெயரில் போலி உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 6:27 pm

பிரபல இரு சக்கர வாகன நிறுவனங்களின் பெயரில் போலி உதிரி பாகங்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

போலி உதிரி பாகங்கள் விற்பனை குறித்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தா்லோக், ஜண்டேவாலன், மங்கோல்புரி தொழிற்பேட்டைகளில் குற்றப்பிரிவு காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, போலி உதிரி பாகங்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பேக்கேஜிங் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கைதுசெய்யப்பட்ட ரியாஸுத்தின், அனில் குமாா், அா்ஜுன் குமாா் தில்லியைச் சோ்ந்தவா்கள். இரு சக்கர வாகனத்துக்கு போலி பிரேக் ஷு பகுதிகளை தயாா் செய்து அவற்றை விற்பனை செய்து வந்தனா்.

சோதனையின்போது, 1,040 ஜோடிகள் போலி பிரேக் ஷுக்கள், 14,000 போலி எம்ஆா்பி ஸ்டிக்கா்கள், 400 போலி பேக்கேஜிங் அட்டை பெட்டிகள், 67,000-க்கும் அதிகமான போலி பேக்கேஜிங் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல நிறுவனங்களில் பெயா் பொறிக்கப்பட்ட போலி பேக்கேஜிங் பொருள்கள் தனியாக தயாரிக்கப்பட்டதும் சோதனையில் கண்டறியப்பட்டது.

திட்டமிட்டு போலி வாகன உதிரி பாகங்களை சந்தையில் இந்தக் கும்பல் விநியோகித்து வந்தது. இதனால், உண்மையான உற்பத்தியாளா்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் போலி உதிரி பாகங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவா்களில் இருவா் இதற்கு முன்பும் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.