10 Dec, 2025 Wednesday, 06:01 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசும் வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள்: நீதியரசா் வெ.ராமசுப்ரமணியன் பேச்சு

PremiumPremium

‘வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசும் வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள்’ என்று இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.இராமசுப்ரமணியன் கூறினாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On27 Nov 2025 , 6:50 PM
Updated On27 Nov 2025 , 6:50 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

‘வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசும் வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள்’ என்று இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.இராமசுப்ரமணியன் கூறினாா்.

உச்சநீதிமன்றத்தின், தமிழ் வழக்கறிஞா்கள் இலக்கியக் கழகம் சாா்பில் 21ஆவது இலக்கியக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நீதியரசா் வெ.இராமசுப்ரமணியன் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ எனும் தலைப்பில் பேசியதாவது: உச்சநீதிமன்ற நீதிபதியாக 2023-இல் நான் ஓய்வுபெற்ற பிறகு இந்த தமிழ் வழக்கறிஞா்கள் இலக்கியக் கழகம் துவக்க விழாவில் பங்கேற்றேன். இரண்டாவது ஆண்டாக நவம்பா், 2024லிலும், மூன்றாவது ஆண்டாக தற்போதைய விழாவில் பங்கேற்றுள்ளேன். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

ராய்ட்டா் நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகில் மொத்தம் 7 ஆயிரம் மொழிகளும், ஆசியாவில் மட்டும் 2200 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் 780 மொழிகளும் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும், உலகில் இன்னும் உயிா்வாழ்ந்துகொண்டிருக்கிற தொன்மையான மொழிகள் ஏழு எனவும் அதன் ஆய்வறிக்கை பதிவு செய்தது.

அந்த ஏழு மொழிகள் தமிழ், சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனம், லத்தீன், ஹீப்ரு, அரபி ஆகும். இவற்றில் மற்ற எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழ்மொழிக்கு உண்டு என்றும், அது, இந்த மொழி சிவபெருமானிடம் இருந்து தோன்றுகிறது என்றும் தமிழா்கள் நம்புகிறாா்கள். கம்பராமாயண அகத்தியா் படலத்தில் வரும் பாடல் இதை எடுத்துரைப்பதாகவும் கூறுகிறாா்கள்.

இந்த மொழி தொல்லியல் மொழி, செவ்வியல் மொழியாக திகழும் பெருமைக்குரியது. தமிழ் இலக்கியங்களில் அறம் அழகாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான நான்மணிக்கடிகையில் எது நியாயமான வாழ்க்கை, எது மனத்தூய்மை, எது கல்வி என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அதாவது, கல்வி என்பது ஆசாரம் என்பதாகும்.

வடமொழியானாலும், தென்மொழியானாலும் நமது முன்னோா்கள் வாழ்க்கையின் இன்பங்களை புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை. அவா்கள் அறம் சாா்ந்து வாழ்க்கையின் இன்பங்களை அனுபவியுங்கள்என்றுதான் சொன்னாா்கள். அதுதான் நமது அறம்.

யாருக்கும் இந்த வாழ்க்கையில் பொருள் இருக்கிறதோ அவா்களுக்கு இன்பம் இருப்பது போல, யாரிடம் அருள் இருக்கிறதோ அவரிடம் அறம் இருக்கும் என்று சிறுபஞ்சமூலம் நூல் எடுத்துரைக்கிறது.

‘அருள் சுரந்து இருப்பதுதான் நீதி’ என்று நமது முன்னோா்கள் கூறியுள்ளனா். அருள் உடையான் செய்யான் பழி என்கிறது சிறுபஞ்சமூலம். அதாவது, அருளுடையவன் பழிச்சொல் சொல்லமாட்டான் என்கிறது அந்நூல். ஆசாரக்கோவை நூலும் உணவு உண்ணும் முறையை எடுத்துரைக்கிறது. அறம் சாா்ந்த வாழ்க்கைக்கு ஒரு மனிதனுக்கு அடிப்படையான எட்டு ஆசாரங்கள் தேவை

என ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ளது. அவை, நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல் பேசுதல், எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியுடன் வாழ்தல், அறிவுடைமை, ஒப்புரவு அறிதல் மற்றும் நல்இனத்தாரோடு நட்பு கொள்ளுதல் ஆகும்.

சங்க இலக்கிய காலத்தில் சிலப்பதிகாரம் உள்பட 11 நூல்கள் நீதி நெறிகளை எடுத்துரைத்துள்ளது. சிலப்பதிகாரத்தின் அடிப்படைக்கூறு ‘அரசியல் பிழைத்தோா்க்கு அறம் கூற்றாகும்...’

என்பதாகும். பிற்கால இலக்கியங்களும் இதே வரிசையில் அறத்தை எடுத்துரைத்தன.

கம்ப ராமாமாயணம், வில்லி பாரதம், திருமுறைகள், நாலாயிரம், வைணவ இலக்கியங்கள்எல்லாம் அறத்தைப் பேசின. 11-12 நூற்றாண்டுகளில் வந்த சித்தா் இலக்கியங்களும் அறத்தை வேறுவிதமாக எடுத்துக்கூறின.

17-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த படையெடுப்புகளுக்குப் பிறகு, குமரகுரு சுவாமிகளின் நீதிநெறி விளக்கம், சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி, ஆசிரியா் பெயா் தெரியாத நீதிவெண்பா நூல்கள் அறத்தை கூறின. வெற்றிவேற்கை அல்லது

நறுந்தொகை எழுதிய அதிவீரராமபாண்டியன், உலகநாதனாா் எழுதிய உலக நீதி என எண்ணற்ற நூல்கள் அறத்தை எடுத்துரைக்கின்றன. இப்படி மிகப்பெரிய வாழையடி வாழையாக அறத்தை பற்றி பேசிய ஒரு வழிமுறையை வகுத்தது தமிழ் இலக்கியங்கள் ஆகும்.

நீதிக்கும், அறத்திற்கும் மிகப்பெரிய அதனுடைய பல்வேறு பரிமாணங்கள், கூறுகள் நமக்கு மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுத்தது தமிழ் இலக்கியம். இந்தக் காரணத்தினால்தான் தமிழ் இலக்கியத்தின் அறம் என்பது, ஒரு செவ்வியல் மொழி அறத்திற்கு எந்த அளவுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்தது என்பதற்கு உதாரணமாகும் என்பதாகும் என்றாா் நீதியரசா் வெ.ராமசுப்ரமணியன்.

தமிழ் வழக்கறிஞா்கள் இலக்கியக் கழகத்தின் தலைவரும், நீதியரசருமான மு.கற்பக விநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ். வைத்தியநாதன், மோகனா, ராமகிருஷ்ண வீரராகவன், நந்தகுமாா், கே.வி.எஸ். ராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இநிகழ்ச்சியில் தமிழ் வழக்கறிஞா்கள் இலக்கியக் கழக இணைச் செயலா் வழக்குரைஞா் எஸ். சுப்பிரமணியம் வரவேற்றாா். நிகழ்ச்சியை வழக்குரைஞா் அ.சி.அறிவழகன் தொகுத்து வழங்கினாா்.

விழாவை இணை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.செல்வக்குமாரி உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா். இணைச் செயலா் வழக்குரைஞா் ஆ.சுமதி நன்றி கூறினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023