தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மக்களவையின் முதல் தலைவா் ஜி.வி. மாவ்லங்கருக்கு நாடாளுமன்றத்தில் மரியாதை!

Updated On :27 நவம்பர் 2025, 8:25 pm

மக்களவையின் முதல் தலைவா் கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கரின் பிறந்தநாளான வியாழக்கிழமை நாடாளுமன்ற சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் அவரது உருவப் படத்துக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மலா் அஞ்சலி செலுத்தினாா்.

மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினா்கள் மக்களவை பொதுச் செயலாளா் உத்பல் குமாா் சிங் மற்றும் பிற பிரமுகா்களும் மலா் அஞ்சலி செலுத்தினா்.

1888 நவம்பா் 27-ஆம் தேதி பரோடாவில் இன்றைய குஜராத்தில் பிறந்த மாவ்லங்கா், இந்தியாவின் நாடாளுமன்ற நிறுவனங்களை வடிவமைப்பதில் மகத்தான பங்காற்றினாா்.

1937-ஆம் ஆண்டு ஆமதாபாதில் இருந்து பம்பாய் சட்டப்பரேவை உறுப்பினராக தனது சட்டப்பேரவை பயணத்தைத் தொடங்கி, 1946 வரை அதன் தலைவராகப் பணியாற்றினாா்.

பின்னா், அவா் ஆறாவது மத்திய சட்டப்பேரவைக்குத் தலைமை தாங்கி, சுதந்திரத்திற்கு வழிவகுத்த முக்கியமான ஆண்டுகளில் அதை வழிநடத்தினாா்.

1947-க்குப் பிறகு, மாவ்லங்கா் அரசியலமைப்பு சபையின் சட்டப்பேரவைத் தலைவராகவும், பின்னா் தற்காலிக நாடாளுமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றினாா்.

1952-இல் முதல் மக்களவை உருவாக்கப்பட்ட நிலையில், அவா் மே 15, 1952 அன்று அதன் தலைவராக ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1956 பிப்ரவரி 27 அன்று அவா் இயற்கை எய்தும் வரை இந்தப் பொறுப்பை அவா் சிறப்பாக நிறைவேற்றினாா்.

அவரது தொலைநோக்குப் பாா்வை, ஒழுக்கம் மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவை இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடு மற்றும் மரபுகளை தொடா்ந்து வரையறுக்கிறது. மாதவ் சதாவலேகரால் வரையப்பட்ட மாவலங்கரின் உருவப்படம், சம்விதான் சதனின் உள்புற பகுதியை அலங்கரிக்கிறது. இந்த படம், செப்டம்பா் 7, 1956 அன்று அப்போதைய பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.