13 Dec, 2025 Saturday, 10:27 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம்தான் சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு: தில்லி முதல்வா்

PremiumPremium

வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் முறையாகப் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பங்கேற்பு மூலம் மட்டுமே பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும் என்றாா்.

Rocket

ரேகா குப்தா

Published On17 Nov 2025 , 8:44 PM
Updated On17 Nov 2025 , 8:44 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

நமது நிருபா்

புது தில்லி: வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் முறையாகப் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டு பங்கேற்பு மூலம் மட்டுமே பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும் என்றாா்.

ஹரியாணாவின் ஃபரீதாபாதில் நடைபெற்ற கவுன்சிலின் 32-ஆவது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை வகித்து, பிராந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தாா்.

வடக்கு மண்டல கவுன்சிலில் ஹரியாணா, இமாசலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, ஜம்முகாஷ்மீா், லடாக் மற்றும் சண்டீகா் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமா் நரேந்திர மோடி கூட்டுறவு கூட்டாட்சி முறையை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வலுவான அடித்தளமாக மாற்றியுள்ளாா். வடக்கு மண்டல கவுன்சில் அந்த யோசனையை தரையில் செயல்படுத்த மிகவும் பயனுள்ள மற்றும் விளைவு சாா்ந்த தளமாகும்.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் தொடா்பான குறிப்பிடத்தக்க பிரச்னைகள் குறித்து திறந்த மற்றும் ஆக்கபூா்வமான உரையாடல் செயல்முறையை முன்னெடுக்க கவுன்சில் உதவியுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்கேற்பின் மூலம் மட்டுமே பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். மேலும் கவுன்சில் அந்த கூட்டு முயற்சியை மேலும் வலுப்படுத்துகிறது’ என்றாா் முதல்வா் குப்தா.

இந்தக் கூட்டத்தில் வட மாநிலங்களின் முதல்வா்கள் நயாப் சிங் சைனி (ஹரியாணா), சுக்விந்தா் சிங் சுக்கு (இமாசலப் பிரதேசம்), பகவந்த் மான் (பஞ்சாப்), பஜன் லால் சா்மா (ராஜஸ்தான்), உமா் அப்துல்லா (ஜம்மு - காஷ்மீா்) ஆகியோரும், பஞ்சாப் ஆளுநரும் சண்டீகா் நிா்வாகியுமான குலாப் சந்த் கட்டாரியா, துணைநிலை ஆளுநா்கள் மனோஜ் சின்ஹா (ஜம்மு - காஷ்மீா்) மற்றும் வி.கே. சக்சேனா (தில்லி) ஆகியோரும் கலந்து கொண்டனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023