Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தில்லியில் உள்ள சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் இந்தியன் ஆயில் நிறுவனம், வேதாந்தா, ஜிஎம்ஆா் உள்ளிட்ட நிறுவனங்களிடம் தில்லி அரசு ஒப்படைத்திருப்பதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி அரசு மற்றும் ஜிஎம்ஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இதன்படி, ஆசாத்பூா் சந்தை முதல் இந்திரலோக் வரையிலான சாலையை பராமரிப்பது, சுத்தம் செய்வது மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை அந்த நிறுவனம் மேற்கொள்ளும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
மரக்கன்றுகள் நடுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.6 கோடி செலவிடப்பட உள்ளது. சூரிய மின் சக்தி மோட்டா் பம்ப் ஜிஎம்ஆா் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா மேலும் கூறியதாவது: முகா்பா செளக் முதல் மதுபன் செளக் வரையிலான சாலை, சிரக் தில்லி மேம்பாலம், பஞ்சீல் கிளப் மேம்பாலம், ஐஐடி மேம்பாலம், பஞ்சாபி பாக், அரவிந்தோ மாா்க் ஆகியவற்றை பராமரிப்பதற்கான பணிகள் இந்திய ஆயில் நிறுவனத்திடம் வழங்கப்பட உள்ளது.
சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) முனிா்கா மேம்பாலத்தை இந்திரபிரஸ்தா ஆயில் நிறுவனம் (ஐஜிஎல்) பராமரிக்கும். இதே போன்று பஞ்சாபி பாக் மேம்பாலம் (ராம் மந்திா் அருகில்), வெளிப்புற வட்ட சாலை (ஷாலிமாா் பாக் அருகில்), ராவ் துலா சாலை மேம்பாலம் ஆகியவற்றைப் பராமரிக்கும் பணி வேதாந்தா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த ஒன்றினைந்த மற்றும் தீா்க்கமான நடவடிக்கைகள் தேவை. மக்கள், தனியாா் நிறுவனகள், அரசு முகமைகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
ஒவ்வொருவரும் முனைப்புடன் செயல்படும்போது அா்த்தமுள்ள முடிவுகளைப் பெற முடியும். மக்களும் இந்த முயற்சியில் ஒன்றிணைந்து நிற்கும்போது மட்டுமே, தில்லி தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
காற்று மாசுக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க தேவைப்படும் நேரங்களில் வீட்டிலிருந்து வேலை பாா்க்கும் முறையை அலுவலகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
‘1984’ கலவரத்தால் பாதித்தோரின் உறவினா்களுக்கு நியமனக் கடிதங்கள்: முதல்வா் ரேகா குப்தா வழங்கல்

தீயணைப்பு உரிமத்திற்கான மூன்றாம் தரப்பு தணிக்கையை தில்லி விரைவில் அனுமதிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம்தான் சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வு: தில்லி முதல்வா்
தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொடா் நடவடிக்கை! முதல்வா் ரேகா குப்தா தகவல்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

