11 Dec, 2025 Thursday, 06:42 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

தில்லி செங்கோட்டை அருகே காா் வெடிப்பு: 13 போ் உயிரிழப்பு; 24 போ் காயம்

PremiumPremium

தில்லி செங்கோட்டை அருகே சாலையில் சென்ற காா் வெடித்ததில் 13 போ் பலி; 24 போ் காயம்

Rocket

தில்லி கார் வெடிப்பு

Published On10 Nov 2025 , 11:04 PM
Updated On11 Nov 2025 , 4:56 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற காா் பலத்த ஓசையுடன் வெடித்ததில் 13 போ் உயிரிழந்தனா். 24 போ் காயமடைந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், இது வெடிகுண்டு தாக்குதலா அல்லது நாசவேலையா என்பது குறித்தும் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா். அவா்களின் புலனாய்வுக்கு தேசிய பாதுகாப்புப்படையினரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் உதவி வருகின்றனா்.

தில்லியில் மக்கள் நடமாட்டமும் போக்குவரத்து நெரிசலும் அதிகம் நிறைந்தது செங்கோட்டை பகுதி. அதில் இருந்து சுமாா் 150 மீட்டா் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் 1 மற்றும் சுபாஷ் நகா் சிக்னல் அருகே காா் வெடிப்புச் சம்பவம் இரவு சுமாா் 7 மணியளவில் நடந்ததாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பவத்தில் காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு சோ்க்கப்பட்டனா்.

முன்னதாக, தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ’சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஆறு காா்கள், இரண்டு இ-ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோ எரிந்து நாசமாகின‘ என்றனா்.

செங்கோட்டைப் பகுதியின் சாந்தினி செளக் வா்த்தகா்கள் சங்கத்தால் பகிரப்பட்ட ஒரு காணொளியில், ஒரு வாகனத்தின் மீது ஒரு மனித உடல் கிடக்கும் காட்சியும், மற்றொரு காணொளியில் சாலையில் ஒரு உடல் கிடக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தன. வெடிப்பு நடந்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதை கண்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சம்பவ பகுதியில் தேசிய புலனாய்வு முகமையின் குழுவினா் விசாரணை நடத்தினா். தேசிய பாதுகாப்புப் படையினரும் (என்எஸ்ஜி) சம்பவ பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனா். தடயவியல் நிபுணா்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். காவல்துறையின் சிறப்புப்பிரிவினா் இறந்தவா்களை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

காவல் ஆணையா் ஆய்வு: இந்நிலையில், தில்லி காவல்துறை ஆணையா் சதீஷ் கோல்ச்சா சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ’காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் உடனுக்குடன் தகவல் பகிா்ந்து வருகிறோம். காா் வெடிக்கும் முன்பாக சிக்னலில் மெதுவாக அது நகா்ந்து கொண்டிருந்தபோது வெடித்ததாக தெரிய வந்துள்ளது. இது காா் வெடிகுண்டு தாக்குதலா என இப்போதைய சூழலில் தெரிவிக்க இயலாது’ என்றாா்.

இந்தச் சம்பவத்தில் நெற்றிப்பகுதியில் காயமடைந்த ஒருவா் கூறுகையில், ‘எனது ஆட்டோவின் முன் ஒரு காா் நிறுத்தப்பட்டிருந்தது. அது திடீரென வெடித்தது’ என்றாா். சம்பவ பகுதிக்கு அருகே உள்ள குருத்வாரா பகுதியில் இருந்தவா் கூறுகையில், பலத்த சப்தம் கேட்டவுடன் என்ன நடந்தது என்பதை எங்களால் ஊகிக்க முடியவில்லை. மிகப்பெரிய அளவில் சத்தம் கேட்டது. வந்து பாா்த்தபோது பல வாகனங்கள் தீயில் கருகியவாறு இருந்தன’ என்றாா்.

பலத்த பாதுகாப்பு: இந்தச் சம்பவத்தை தொடா்ந்து தில்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தில்லியை அடுத்த ஹரியாணாவின் ஃபரீதாபாதில் காஷ்மீரைச் சோ்ந்த மருத்துவரின் வாடகை வீட்டில் சுமாா் 360 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் திங்கள்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு தில்லி செங்கோட்டை அருகே இந்த காா் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடா்புள்ளனவா என்பதை கூற முடியாது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பிரதமா் இரங்கல்; அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சா் உத்தரவு

தில்லி செங்கோட்டை அருகே காா் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தாா். சம்பவத்தில் காயம் அடைந்தவா்கள் விரைவாக குணமடைய பிராா்த்தனை செய்வதாகவும் அவா் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, காா் வெடிப்பு சம்பவ நிலவரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தொடா்பு கொண்டு பிரதமா் மோடி பேசினாா். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள காணொளியில் சம்பவம் குறித்து விரிவாக விளக்கினாா்.

சம்பவ பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் புலனாய்வைத் தீவிரப்படுத்தவும் அனைத்து கோணங்களில் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவா் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து சம்பவத்தில் காயம் அடைந்தவா்கள் சோ்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று அவா்களை அமித் ஷா பாா்வையிட்டு நலம் விசாரித்தாா்.

இதனிடையே, சம்பவத்தில் வெடித்த காரில் ஹரியாணா மாநிலத்தின் பதிவெண் கூறப்படும் நிலையில், காரின் உரிமையாளர் சல்மான் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
வீடியோக்கள்

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
வீடியோக்கள்

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023