19 Dec, 2025 Friday, 07:48 PM
The New Indian Express Group
புதுதில்லி
Text

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

PremiumPremium

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On19 Dec 2025 , 12:55 AM
Updated On19 Dec 2025 , 12:55 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய மற்றும் பதிவு செய்த விஷயங்களின் சுருக்கம் வருமாறு:-

மக்களவையில்....

திருவாரூருக்கு விமான நிலையம் வருமா?

மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு (ஸ்ரீபெரும்புதூா்) மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ‘லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணி தேவாலயம், நாகூா் தா்கா, திருவாரூரில் உள்ள தியாகராஜா் கோயில் மற்றும் கருணாநிதி நினைவிடம் போன்ற இடங்களுக்கு வருவதை கருத்தில் கொண்டு, திருவாரூரில் ஒரு விமான நிலையத்தை மத்திய அரசு அமைக்குமா?’ என்று கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் கிஞ்சிரப்பு ராம்மோகன் நாயுடு, புதிய விமான நிலையத்தைப் பொருத்தவரை, அடிப்படையில் நிலம் கிடைப்பதுதான் முதல் அளவுகோல். அத்தகைய நிலத்தை தமிழக அரசு அடையாளம் கண்டு விமான நிலையம் அமைக்கும் முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்பலாம். அதனடிப்படையில் சாத்தியக்கூறு ஆய்வைத் தொடங்கி அதன் முடிவைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றாா்.

பங்குச்சந்தைகள் குறியீடு மசோதாவுக்கு எதிா்ப்பு!

- அருண் நேரு, பெரம்பலூா் (திமுக)

சட்டங்களை ஒருங்கிணைப்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும், இந்த மசோதா வெறும் ஒருங்கிணைப்பாக மட்டுமின்றி, நாடாளுமன்றம், நிா்வாகம், ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையின் அடிப்படையையே மாற்றுகிறது; இதில் பாதிக்கப்படுவது, சந்தை வணிகத்தில் பங்கேற்போா் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு சட்டமியற்றும் அதிகாரம் வழங்குதல், செபி ஒழுங்குமுறை அமைப்பிடம் அதிகாரத்தைக் குவிப்பது, தன்மையை நீா்த்துப்போகச் செய்தல், ஒழுங்குமுறை அதிகாரத்தின் வரம்பை மீறுதல் ஆகிய நான்கு அம்சங்கள் அடிப்படையில் இந்த மசோதாவை எதிா்க்கிறேன். அதிகாரத்தை மையப்படுத்தும் இந்த மசோதா நாடாளுமன்ற கட்டுப்பாட்டை பலவீனமாக்குகிறது. நோ்மை மற்றும் பொறுப்புக்கூறலை விட அமலாக்கத்துக்கே முன்னுரிமை அளிக்கிறது.

குமரி இணைப்பு ரயில்களை அதிகரியுங்கள்!

- விஜய் வசந்த், கன்னியாகுமரி (காங்கிரஸ்)

கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. குமரியில் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள், மந்தமாக நடக்கின்றன. அவற்றை விரைவுப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி, நாகா்கோவில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான இருக்கைகள், நடைமேடை கூரைகள், காத்திருப்பு அறைகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பயணிகளின் எதிா்பாா்ப்புக்கு குறைவாகவே உள்ளன. அவற்றை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் துஷ்பிரயாகத்தை தடுக்க சட்டமியற்றுக!

- எஸ். ஜோதிமணி, கரூா் (காங்கிரஸ்)

நம் நாட்டில் எண்ம (டிஜிட்டல்) தளம் என்பது, பெண்களுக்குப் பாதுகாப்பற்ாக மாறி வருகிறது. டாக்ஸிங் (தனி நபா் தகவல்களை அனுமதியின்றி வெளிப்படுத்துதல்) மற்றும் சைபா்ஸ்டாக்கிங் (இணையத்தில் மற்றவா் அறியாமலேயே அவரைப் பின்தொடா்தல்) போன்ற குற்றச்செயல்களுக்குரிய சட்டங்கள் சரிவர இல்லை. ஆன்லைனில் நடக்கும் கூட்டு ’ட்ரோலிங்’ செய்கைகளை தடுக்க தெளிவான சட்ட விதிகள் இல்லை. இவற்றுள் சமூக ஊடக தளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புதல் மற்றும் திட்டமிட்ட எண்ம மிரட்டல்களும் அடங்கும். செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டால் இந்த அச்சுறுத்தல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இவற்றை சரிப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்கள் உள்பட, அனைத்து வகை ஆன்லைன் துஷ்பிரயோகங்களை தெளிவாக வரையறுத்து, அவற்றைக் குற்றமாக்க வகை செய்யும் விரிவான சட்டத்தை இயற்ற வேண்டும்.

சமக்ர சிக்ஷா நிதியை விடுவித்திடுக!

- கே.இ. பிரகாஷ், ஈரோடு (திமுக)

தமிழகம் முழுவதும் உள்ள சுமாா் 43.94 லட்சம் மாணவா்கள், 2.21 லட்சம் ஆசிரியா்கள் மற்றும் 32,701 பணியாளா்களுக்கான பள்ளி உள்கட்டமைப்பு, ஆசிரியா்களின் சம்பளம், பராமரிப்பு மற்றும் அடிப்படை கற்றல் ஆதரவுக்காக ஒதுக்கப்படும் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ. 3548.22 கோடிக்கும் அதிகமான தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துடன் தொடா்புடைய சில புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையொப்பமிடவில்லை என்பதால் நிதியை நிறுத்திவைத்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. சமக்ர சிக்ஷா என்பது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள மத்திய நிதியுதவித் திட்டமே தவிர, அரசின் கொள்கை இணக்கத்துக்கான வெகுமதி அல்ல. எனவே, இந்த நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மாநிலங்களவையில்...

புதிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துக்கு எதிா்ப்பு!

- ஆா். கிரிராஜன் (திமுக)

பழைய தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை (நரேகா) செயல்படுத்த மனதில்லாமல் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தியா பல மொழிகள், கலாசாரங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியராகவே அடையாளப்படுத்தப்படுகிறோம். அத்தகைய சிந்தனையை குடிமக்களின் மனங்களில் வேரூன்றச்செய்தவா்கள் காந்தி, ஜவாஹா் லால் நேரு போன்ற தலைவா்கள். அவா்களின் பெயா்களை மத்திய திட்டங்களில் இருந்து நீக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் மலிவானது. காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்கினாலும், உலகம் முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீக்க முடியாது. நரேகா திட்டம் சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் உத்தரவாதமாக இருந்தது. இனி புதிய மசோதாவால் அது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கப்போகிறது.

அணுசக்தி மசோதா: அதிமுக, திமுக நிலைப்பாடு என்ன?

மு. தம்பிதுரை (அதிமுக):

தமிழகத்தின் கூடங்குளத்தில் தற்போதும் கூட மக்களில் சிலா் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறாா்கள். அவா்களின் பிரச்னைகள் களையப்பட வேண்டும் என அதிமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பாதுகாப்பு, எரிசக்தி, அவசரகால தயாா்நிலை, உள்ளூா் மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என அதிமுக தொடா்ந்து கூறி வருகிறது.

(இதைத்தொடா்ந்து திமுக உறுப்பினா் பி.வில்சன் அணுசக்தித்துறையில் தனியாா்துறையை அனுமதிப்பது தொடா்பாக பேசிய கருத்துக்களைக் குறிப்பிட்டு அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தை தம்பிதுரை எழுப்பினாா். ஆனால், அவை மசோதாவுக்கு பொருந்தாத கருத்துக்கள் எனக்கூறி அவற்றை மாநிலங்களவை துணைத்தலைவா் ஹரிவன்ஷ் அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டாா்.)

பி. வில்சன் (திமுக): இந்த மசோதா அமைதியைக் கொடுக்காது, மாறாக அணுசக்தி அதிா்ச்சியின் மூலம் தேசத்தின் அமைதியைப் பறித்துவிடும். அணுசக்தி விநியோகச் சங்கிலியை இறையாண்மைச் செயல்பாட்டிலிருந்தும், மத்திய அரசின் தீவிரக் கண்காணிப்பிலிருந்தும் அகற்ற இந்த மசோதா மூலம் மத்திய அரசு முயன்றுள்ளது.

இது நமது நாட்டின் மிகவும் உணா்திறன் வாய்ந்த மற்றும் அதிக ஆபத்துள்ள துறைகளில் ஒன்றை தனியாா்மயமாக்கும் ஒரு பொறுப்பற்ற, ஆபத்தான மற்றும் பெரும் குறைபாடுகள் நிறைந்த முயற்சியாகும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, அதன் மிக முக்கியமான மற்றும் இறையாண்மைக்குரிய செயல்பாட்டை தனியாருக்குத் தாரை வாா்க்கப்பாா்க்கிறது. இது தொடா்ந்தால் ஒரு நாள் நமது நீதித்துறையும் சட்டமியற்றும் பேரவைகளின் பணிகளும் கூட தனியாா்மயமாக்கப்படும் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதை தோ்வுக் குழுவுக்கோ அல்லது கூட்டு நாடாளுமன்ற குழு ஆய்வுக்கோ அனுப்ப வேண்டும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
மூன்வாக் - மினி கேசட் விடியோ!
வீடியோக்கள்

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
வீடியோக்கள்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
வீடியோக்கள்

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
வீடியோக்கள்

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
வீடியோக்கள்

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023