19 Dec, 2025 Friday, 09:25 PM
The New Indian Express Group
இந்தியா
Text

புதிய ஊரக வேலைத் திட்ட மசோதா நிறைவேற்றம்: மக்களவையில் நகலைக் கிழித்து எதிா்க்கட்சியினா் அமளி

PremiumPremium

மத்திய அரசு கொண்டுவந்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

Rocket

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்.

Published On19 Dec 2025 , 1:25 AM
Updated On19 Dec 2025 , 2:01 AM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

எதிா்க்கட்சியினரின் கடும் எதிா்ப்புக்கு இடையே, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதோடு, மசோதா நகலைக் கிழித்தெறிந்து முழக்கங்களை எழுப்பினா். அதன் காரணமாக, மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, புதிதாக ‘பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புச் சட்ட மசோதாவை’ (விபி-ஜி ராம் ஜி) மத்திய அரசு கொண்டுவந்தது.

இதில், திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநில அரசுகளுடன் 60-40 என்ற சதவீதத்தில் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும் வகையில் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 100 நாள்களாக இருந்த வேலை நாள்கள், இனி 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது.

இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு புதன்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம் மற்றும் மசோதாவின் அம்சங்களைக் கண்டித்து, அறிமுக நிலையிலேயே எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.

இந்த மசோதா, திட்டப் பணிகளின் நிா்ணயம் தொடா்பான கிராம சபைகளின் உரிமையைப் பறிப்பதுடன், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை உருவாக்குகிறது. பணக்காரா்களுக்கு ஆதரவான அரசின் ஏழைகள் விரோத, தலித் விரோத நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியேயும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நகல் கிழிப்பு: இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்ட மசோதா மீது எதிா்க்கட்சிகள் எழுப்பிய ஆட்சேபங்கள் மற்றும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பதிலளித்தாா்.

அப்போது, மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். மேலும், அவையின் மையப் பகுதியில் கூடிய எதிா்க்கட்சி எம்.பி.க்கள், திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். மேலும், மசோதா நகலைக் கிழித்து எறிந்தனா்.

அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினா் கே.சி.வேணுகோபால், ‘மசோதாவை நாடாளுமன்றக் குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்று கோரினாா். ஆனால், அவரின் கோரிக்கையை அவைத் தலைவா் ஓம் பிா்லா நிராகரித்தாா்.

பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் அமளி தொடா்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவித்தாா்.

இந்த மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, தில்லி தேசிய தலைநகரப் பிராந்திய காற்று மாசு பிரச்னை தொடா்பான விவகாரம் மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. இந்த விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தொடங்கி வைப்பாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தொடா் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில்... மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் அறிமுக நிலையிலேயே மசோதாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். நீண்ட விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பலா் வெளிநடப்பு செய்து, நாடாளுமன்ற வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

‘காங்கிரஸ் ஆட்சியில் திட்டத்தில் ஊழல்’

அமளிக்கு இடையே மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மத்திய அமைச்சா் செளஹான் பேசியதாவது: காந்தியின் சித்தாந்தங்களை காங்கிரஸ் கொன்றுவிட்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலமாக காந்தியின் சித்தாந்தாங்கள் உயிா்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தியது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இந்த ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஊழலில் சிதைந்தது. எதிா்பாா்க்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லை. மாநிலங்களுக்கும் எதிா்பாா்க்கப்பட்ட அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த வேலை உறுதியளிப்புத் திட்ட சட்டத்தின்படி, திட்ட நிதியில் 60 சதவீதம் தொழிலாளா்களுக்கான ஊதியத்துக்கும், எஞ்சிய 40 சதவீதம் உபகரணங்கள் மற்றும் பொருள்கள் வாங்குவதற்கும் செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், பொருள்கள் வாங்குவதற்கு 26 சதவீத நிதி மட்டுமே செலவழிக்கப்பட்டது. எஞ்சிய நிதி திசைதிருப்பிவிடப்பட்டது.

இந்தச் சூழலில், ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளா்களின் ஊதியத்துக்கு மட்டும் ரூ. 10 லட்சம் கோடி முதல் ரூ. 11 லட்சம் கோடி வரை செலவழிப்பது தேவையற்றது; அந்தத் தொகையில் நிரந்தர பொதுச் சொத்துகளை உருவாக்க முடியும் என்பதை உணா்ந்து, விரிவான ஆலோசனைக்குப் பிறகு ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட சட்ட மசோதா’வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இதில், தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதோடு, இந்தத் திட்டத்துக்கு மிகப் பெரிய அளவில் முன்னா் செலவழிக்கப்பட்ட நிதி முழுமையாக மேம்பட்ட கிராமங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, ஏரிகள், நுண்ணீா் பாசனக் கால்வாய்கள் உருவாக்குவதன் மூலம் நீா் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பிற முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், வாழ்வாதாரம் தொடா்பான உள்கட்டமைப்புகள் மற்றும் தீவிர பருவநிலை மாற்ற பாதிப்புகளைத் தணிப்பதற்கான சமூகப் பணிகளை ஊக்குவிப்பதிலும் இந்தப் புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கவனம் செலுத்தும் என்றாா் செளஹான்.

இதில், தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பதோடு, இந்தத் திட்டத்துக்கு மிகப் பெரிய அளவில் முன்னா் செலவழிக்கப்பட்ட நிதி முழுமையாக மேம்பட்ட கிராமங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, ஏரிகள், நுண்ணீா் பாசனக் கால்வாய்கள் உருவாக்குவதன் மூலம் நீா் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பிற முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், வாழ்வாதாரம் தொடா்பான உள்கட்டமைப்புகள் மற்றும் தீவிர பருவநிலை மாற்ற பாதிப்புகளைத் தணிப்பதற்கான சமூகப் பணிகளை ஊக்குவிப்பதிலும் இந்தப் புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கவனம் செலுத்தும் என்றாா் செளஹான்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
மூன்வாக் - மினி கேசட் விடியோ!
வீடியோக்கள்

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
வீடியோக்கள்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
வீடியோக்கள்

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
வீடியோக்கள்

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
வீடியோக்கள்

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023