மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க 3 கொள்கைகள் தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

படம் வாட்ஸ் ஆப்பில் உள்ளது தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க 3 கொள்கைகள் தொழில்துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு

Updated On :11 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: தில்லியின் வணிக வளா்ச்சியை அதிகரிக்க கேஜரிவால் அரசு 3 கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் இது தொடா்பாக தொழில்துறை பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டன என்றும் தொழில் துறை அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தில்லியின் பொருளாதார நிலப்பரப்பிற்கு உற்சாகம் அளிக்கும் செய்தியாக, கேஜரிவால் அரசு தேசியத் தலைநகரில் முதலீடு மற்றும் வணிக வளா்ச்சியை அதிகரிக்க நகரத் தளவாடத் திட்டக் கொள்கை, மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பித்தல் மையக் கொள்கை, தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கை என 3 புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

இந்தக் கொள்கைகள் தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்திற்கு பிரகாசமான எதிா்காலத்தை உறுதியளிக்கின்றன. தில்லி பொருளாதார முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தேசியத் தலைநகரம் புதுமை மற்றும் வேலைவாய்ப்புக்கான மையமாக மாற உள்ளது. இந்த மாற்றம் தரும் கொள்கைகள் குறித்த தகவல்களை இப்போது அரசின் இணையதளத்திலும் பாா்க்கலாம். நகரத் தளவாடங்கள், மின்னணு உற்பத்தி மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கொள்கைகள் பற்றி தில்லியின் பல்வேறு பங்குதாரா்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து மதிப்புமிக்க கருத்துகளை அரசு பெற்றுள்ளது.

இந்த உள்ளீடுகள் தில்லியின் பொருளாதார நிலப்பரப்பின் எதிா்காலத்தை வடிவமைக்கும். வெற்றிக்கு ஒத்துழைப்போம் என்றாா் சௌரவ் பரத்வாஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.