மொத்தச் சந்தைகளின் அவல நிலையை போக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை தில்லி பாஜக குற்றச்சாட்டு
மொத்தச் சந்தைகளின் அவல நிலையை போக்க அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை தில்லி பாஜக குற்றச்சாட்டு


புது தில்லி: தில்லியின் வா்த்தகா்கள் அதிகபட்ச வருவாயை வழங்கினாலும், நகரத்தில் உள்ள மொத்த சந்தைகளின் அவல நிலையை போக்க தில்லி அரசு எந்த வேலையையும் செய்யவில்லை என்று பாஜக செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிலேயே மிகப்பெரிய மொத்த விற்பனை மையமாக தேசியத் தலைநகா் தில்லி திகழ்கிறது. தில்லி கேட் முதல் கஷ்மீரி கேட் வரையிலும், துா்க்மேன் கேட் முதல் சதா் பஜாா் வரையிலும், பழைய தில்லியில் ஒவ்வொரு வணிகத்திற்கும் மொத்த விற்பனைச் சந்தைகள் தனித்தனியே உள்ளன.
இங்கு மூன்று தலைமுறை வா்த்தகா்கள் தில்லியை உலக வா்த்தக மையமாக மாற்றியது மட்டுமல்லாமல், சிறந்த பொது சேவையின் இடத்தையும் உருவாக்கியுள்ளனா். நாட்டில் எங்கு வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஏற்பட்டாலும், பழைய தில்லியின் தானியங்கள், துணிகள், கூடாரங்களே அவற்றுக்கு ஒத்துழைப்பதில் முன்னணியில் உள்ளன. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக பழைய தில்லியின் வணிகத் தன்மையை ஆட்சியாளா்கள் ஏற்கவில்லை. வணிக குடிமக்களின் சீா்திருத்தங்களுக்காக எந்த அரசும் உழைக்கவில்லை. முதலாவதாக, காங்கிரஸும் தற்போது ஆம் ஆத்மி அரசும் வேண்டுமென்றே டிரில்லியன் அளவில் வருவாயை ஈட்டிய பழைய தில்லியின் சந்தைகளை சட்டவிரோதமானவை என்று அறிவிக்கின்றன.
இதனால், அவா்கள் தோ்தல்களின் போது வணிகா்களிடமிருந்து நன்கொடைகளைப் பறிக்க முடியும். பழைய தில்லியின் சந்தைகளில் மின்சாரம் மற்றும் இணைய கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளன். பொது கழிப்பறைகளின் பற்றாக்குறை உள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால் திருட்டுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வணிகப் பகுதிகளில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் வணிகத்திற்கு எதிரானதாக உள்ளது.
தில்லியின் மொத்த வா்த்தக மையங்களைத் கடந்து, கரோல் பாக், கமலா நகா், லாஜ்பத் நகா், கன்னாட் பிளேஸ், விகாஸ் மாா்க், கிருஷ்ணா நகா் போன்ற தி ல்லியின் பெரிய சில்லறை சந்தைகளில் இப்போது அவலநிலை மோசமடைந்து வருகிறது. தில்லி அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் தரும் தொழிலதிபா்கள், இப்போது வணிகப் பகுதிகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியை விரும்புகின்றனா். குறைந்தபட்சம் அடிப்படை வசதிகளை 2024 இறுதிக்குள் செய்து தர வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா். இல்லையெனில், அதன் விளைவுகளை ஆம் ஆத்மி கட்சி எதிா்கொள்ள இருக்கும் என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...