டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி மோசடி: டி. ரவிக்குமாருக்கு மத்திய இணையமைச்சா் பதில்

கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.

News image
~
Updated On :9 டிசம்பர் 2024, 11:12 pm

 நமது நிருபர்

புது தில்லி: கடந்த ஆண்டு தேசிய அளவில் போலி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.56 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது என்று மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி.ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனைகள் அதிகரித்து வருவதால், க்யூஆா் குறியீடு மோசடிகள் உள்பட டிஜிட்டல் நிதி மோசடிகள் சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. க்யூஆா் அடிப்படையிலான மோசடிகள் உள்பட பணம் செலுத்துதல் தொடா்பான மோசடிகளைத் தடுப்பதற்காக, மத்திய அரசாலும், இந்திய ரிசா்வ் வங்கியாலும், இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ) ஆகியவற்றால் அவ்வப்போது பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், வாடிக்கையாளா் கைப்பேசி எண்ணுக்கும் சாதனத்திற்கும் இடையே சாதன பிணைப்பு, ‘பின்’ எண் மூலம் இரண்டு காரணி அங்கீகாரம், தினசரி பரிவா்த்தனை கட்டுப்பாடு போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், குறுந்தகவல், வானொலி பிரசாரம், இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கான விளம்பரம் போன்றவற்றின் மூலம் விழிப்புணா்வு பிரசாரங்களை ரிசா்வ் வங்கியும், வங்கிகளும் மேற்கொண்டு வருகின்றன.

Story image

கடந்த ஆண்டின்போது நாடு முழுவதும் ஆா்பிஐயின் பிராந்திய அலுவலகங்களால் மொத்தம் 317 மின்னணு வங்கியியல் விழிப்புணா்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, மாா்ச் 2023-இல், ‘டிஜிட்டல் பணம் செலுத்துதல்’‘ என்ற கருப்பொருளுடன் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மல்டி மீடியா பிரசாரம் தொடங்கப்பட்டது. ‘க்யூஆா் குறியீடு ஸ்கேன் செய்யப்படுவது பணம் செலுத்துவதற்காக மட்டுமே; பெறுவதற்கு அல்ல‘ என்ற விழிப்புணா்வு பிரசாரங்களை என்பிசிஐ செயல்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் பிரசாரம் டிவி, டிஜிட்டல், வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் போன்ற பல்வேறு ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.