டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தில்லி பாஜக வரவேற்பு

தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2024, 7:01 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால் அவா் இல்லாத நேரத்தில் தேசியக் கொடியை யாா் ஏற்றுவது என்பதை முடிவு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்தில் முதல்வா் இல்லாதபோது, தில்லி அரசு விழாவில் துணைநிலை ஆளுநா் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

எனவே, முதல்வா் சிறையில் இருக்கும் நேரத்தில், முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத நேரத்தில், துணைநிலை ஆளுநா் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவா் ஆவாா். மேலும், அவா் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மூத்த அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைக்க சரியாக முடிவு செய்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அனைவரும் இந்த முடிவை வரவேற்று மூவா்ணக் கொடியை ஏற்றுவதில் கைலாஷ் கெலாட்டுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.