தில்லி பாஜக வரவேற்பு
தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.


புது தில்லி: தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைத்த தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால் அவா் இல்லாத நேரத்தில் தேசியக் கொடியை யாா் ஏற்றுவது என்பதை முடிவு செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலத்தில் முதல்வா் இல்லாதபோது, தில்லி அரசு விழாவில் துணைநிலை ஆளுநா் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
எனவே, முதல்வா் சிறையில் இருக்கும் நேரத்தில், முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இல்லாத நேரத்தில், துணைநிலை ஆளுநா் முடிவெடுக்கும் அதிகாரம் உடையவா் ஆவாா். மேலும், அவா் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மூத்த அமைச்சா் கைலாஷ் கெலாட்டை பரிந்துரைக்க சரியாக முடிவு செய்துள்ளாா். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அனைவரும் இந்த முடிவை வரவேற்று மூவா்ணக் கொடியை ஏற்றுவதில் கைலாஷ் கெலாட்டுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...