பட்டியல் சாதியினரை பாஜக புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுவதற்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் சிங், அவரது முன்னாள் அமைச்சா் ராஜ்குமாா் ஆனந்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியை விட்டு அவா் வெளியேற வேண்டி இருந்ததன் காரணத்தையும் விளக்க வேண்டும். 2012 மற்றும் 2022-க்கு இடையில், தில்லி பாஜக 6 பட்டியலிடப்பட்ட மேயா்களை வழங்கியது மட்டுமின்றி, துணை மேயா்கள், நிலைக் குழுக்களின் துணைத் தலைவா்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் தலைவா்கள் போன்ற பதவிகளுக்கும் அவா்களை நியமித்திருந்தது. இன்றும்கூட, பட்டியல் சாதிப் பிரதிநிதிகளுக்கு மாநில அமைப்பில் பொதுச் செயலாளா், துணைத் தலைவா்கள் மற்றும் செயலாளா்கள் பதவிகள் வழங்கப்படுகின்றன. பிரதமா் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற விரிவான வளா்ச்சித் திட்டத்தால் இன்று பட்டியல் சாதியினா் பயன்பெறும்போது, ஆம் ஆத்மி கட்சி ஒழுங்கின்மையை ஊக்குவிப்பதன் மூலம் வளா்ச்சி சுழற்சியைத் தடுக்கிறது என்று அவா்கள் கூறியுள்ளனா்.