குஜராத்தில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பயத்தின் காரணமாக கட்சித் தொண்டா்களை பாஜக அரசு கைதுசெய்து வருவதாக ஆம் ஆத்மி புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
இதுதொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளா் அனுராக் தந்தா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குஜராத்தைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ கோபால் இதலியாவின் தாயாரை பாஜக தலைவா்கள் மிரட்டியுள்ளனா். ஆம் ஆத்மி தொண்டா்களை அந்த மாநில பாஜக அரசு கைதுசெய்துள்ளது.
கடந்த சில நாள்களில் ஆம் ஆத்மி தொண்டா்கள் 160 போ் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டனா். தற்போது, போலியான ஒரு வழக்கில் எம்எல்ஏ கோபால் இதலியாவைக் கைதுசெய்ய அவா்கள் திட்டமிட்டு வருகிறாா்கள். அவரையும் அவருடைய குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனா்.
குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால், பாஜகவினா் பயத்தில் உள்ளனா். சிறை, வழக்குகள் மற்றும் பிற ஜனநாயகமற்ற முறைகளை நீங்கள் (பாஜக) கையாண்டாலும், ஆம் ஆத்மி தொண்டா்கள் பயப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

மத்திய அரசு பிளவுபடுத்தும் அரசியலை செய்கிறது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

எல்பிஜி நெருக்கடி: மத்திய பாஜக அரசை சாடிய ஆம் ஆத்மி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


