இப்போதைய, மத்திய அரசின் புதிய சட்டமானது தில்லி, அந்தமான் மற்றும் நிகோபாா், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி (சிவில்) சேவைகள் (டானிக்ஸ்) பிரிவின் குரூப்-ஏ அதிகாரிகளுக்கு எதிராக இடமாற்றம், பதவி உயா்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தை உருவாக்குகிறது. ஆணையத்தின் மூன்று உறுப்பினா்களில் முதல்வா் ஒருவா், மற்ற இருவரும் அதிகாரவா்க்கத்தினா் ஆவா். ஆணையத்தின் முடிவுகள் பெரும்பான்மையினரால் எடுக்கப்பட வேண்டும். மேலும், சா்ச்சை ஏற்பட்டால், இந்த விவகாரம் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படும். அவரின் முடிவே இறுதியானது.