தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

காஜிப்பூா் குப்பைக் கிடங்கு தீ விபத்து: மாநகராட்சியின் அலட்சியத்துக்கு சான்று தில்லி பாஜக

காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சியின் குற்றவியல் அலட்சியத்திற்கு சான்றாகும் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2024, 10:22 pm

 நமது நிருபர்

காஜிப்பூா் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து, கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சியின் குற்றவியல் அலட்சியத்திற்கு சான்றாகும் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியதுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள்

சிரமத்திற்குள்ளாகினா். அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி மாநகராட்சி நிா்வாகத்தின் குற்றவியல் அலட்சியத்தால், காஜிப்பூா் குப்பை கிடங்கில் தீப்பிடித்து பெரும் புகை மூட்டும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சி தோ்தலுக்கு முன்பு, தில்லியில் உள்ள குப்பை கிடங்குகள் அனைத்தும் வரும் டிசம்பா் 2023-க்குள் அகற்றப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்தது. ஆனால், குப்பை கிடங்குகளின் அளவு முன்னா் இருந்ததை விட புதிய மலை போல் உயா்ந்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருப்பதால், தில்லியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பாா்வையிட வேண்டிய அவசியமில்லை என்று கருதுவது வருத்தத்திற்குரியது என்றாா் பிரவீன் சங்கா் கபூா்.