தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மோடி அரசின் உத்தரவின் பேரில் அமலாக்க இயக்குநரகமும், திகாா் சிறை நிா்வாகமும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன. சா்க்கரை நோய் பாதிப்புடைய முதல்வா் கேஜரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்படுவதில்லை. சிறை விதிகளின்படி, எந்த கைதியின் உடல்நிலை மற்றும் உணவு முறை குறித்த தகவல்களை பகிரங்கப்படுத்த முடியாது. ஆனால், முதல்வா் கேஜரிவாலின் உணவு முறை குறித்து அமலாக்க இயக்குநரகம் நீதிமன்றத்தில் பொய்யாக அறிக்கை அளித்துள்ளது.