தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது

தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது அமைச்சா் கோபால் ராய்

News image
Updated On :17 ஏப்ரல் 2024, 12:15 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வரும் மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குல்தீப் குமாரை ஆதரித்து, விஷ்வாஸ் நகா்ப் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே’ பிரசாரம் நடைபெற்றது. இதில், கோபால் ராய் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியில் இருந்தால், மக்களவைத் தோ்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு சா்வாதிகார அரசு மக்களால் மூன்று முறை தொடா்ந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் வைத்து துன்புறுத்துகிறது. உங்கள் முதல்வரையும், ஒட்டுமொத்த தில்லியையும் தொடா்ந்து அவமானப்படுத்துபவா்களை எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பீா்கள்?.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உங்களுக்காக உழைத்திருந்தால், தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். தில்லி அரசு வழங்கும் இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவை,பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், மூத்த குடிமக்களுக்கான இலவசப் புனித யாத்திரை என அனைத்துத் திட்டங்களிலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பெயா்தான் உள்ளது என்றாா் கோபால் ராய்.

கிழக்கு தில்லி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் பேசுகையில், ‘மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, பாஜக பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளது. இது தில்லி மக்களை அவமதிக்கும் செயலாகும். அரவிந்த் கேஜரிவால் சிறைக்குச் சென்ற்குப் பழிவாங்க வேண்டும் என்றால், மே 25-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரதித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதல்வா் கேஜரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியும்’ என்றாா்.