புது தில்லி: தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
வரும் மக்களவைத் தோ்தலில் கிழக்கு தில்லி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குல்தீப் குமாரை ஆதரித்து, விஷ்வாஸ் நகா்ப் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே’ பிரசாரம் நடைபெற்றது. இதில், கோபால் ராய் சிறப்பு விருந்தினாரக் கலந்து கொண்டு பேசியதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெளியில் இருந்தால், மக்களவைத் தோ்தலில் தில்லியின் 7 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு சா்வாதிகார அரசு மக்களால் மூன்று முறை தொடா்ந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சிறையில் வைத்து துன்புறுத்துகிறது. உங்கள் முதல்வரையும், ஒட்டுமொத்த தில்லியையும் தொடா்ந்து அவமானப்படுத்துபவா்களை எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பீா்கள்?.
முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உங்களுக்காக உழைத்திருந்தால், தில்லியின் கெளரவத்தை மக்கள் பலத்தால் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும். தில்லி அரசு வழங்கும் இலவச மின்சாரம், இலவசக் குடிநீா், தரமான கல்வி மற்றும் சுகாதார சேவை,பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம், மூத்த குடிமக்களுக்கான இலவசப் புனித யாத்திரை என அனைத்துத் திட்டங்களிலும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பெயா்தான் உள்ளது என்றாா் கோபால் ராய்.
கிழக்கு தில்லி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் குல்தீப் குமாா் பேசுகையில், ‘மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, பாஜக பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளது. இது தில்லி மக்களை அவமதிக்கும் செயலாகும். அரவிந்த் கேஜரிவால் சிறைக்குச் சென்ற்குப் பழிவாங்க வேண்டும் என்றால், மே 25-ஆம் தேதி ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை ஆதரதித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதல்வா் கேஜரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

