ஆக்ரோஷமான பேச்சுகளும், ஆவேசமான உரைகளும் தேர்தல் பிரசாரத்தில் இருந்து எப்போதுமே பிரிக்க முடியாது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் வார்த்தை வசீகரமும், பேச்சாற்றலும்தான் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில் அத்துமீறிய விமர்சனங்களும், சர்ச்சைக்குரிய கருத்துகளும் தேர்தல்களத்தில் பரபரப்பையும், தேர்தல் ஆணையத்தின் கண்டனத்தையும் பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்த மக்களவைத் தேர்தலில் அதிகமாக சர்ச்சையில் சிக்கியவர் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த சாத்விக்கு 30 ஆண்டுகள் பாஜகவின் கோட்டையாக உள்ள போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். ஹிந்து பயங்கரவாதம் என்ற வார்த்தை மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை அதிகம் விமர்சிக்கும் திக்விஜய் சிங்குக்கு எதிராக வலுவான வேட்பாளர் பிரக்யா என்றே கருதப்படுகிறார்.
ஏனெனில், மத்தியப் பிரதேசத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட சாத்வி, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். மகாராஷ்டிரத்தின் மாலேகானில் கடந்த 2008ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி கைது செய்யப்பட்டார். எனினும், குண்டுவெடிப்பில் அவருக்குத் தொடர்பில்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துவிட்டது. அதேநேரத்தில், விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாத்வி இப்போது ஜாமீனில்தான் வெளியே உள்ளார்.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த அடுத்த நாளிலேயே தனது பேச்சு மூலம் சர்ச்சையில் சிக்கினார் சாத்வி. "மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணையில், என்னை துன்புறுத்திய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே, நான் சபித்த காரணத்தால்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார்' என்று பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, தனது பேச்சுக்காக சாத்வி மன்னிப்புக் கோரினார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சாத்வியிடம் விளக்கம் கேட்டது. அவர் அளித்த விளக்கத்தை ஏற்காத தேர்தல் ஆணையம் அவர் பிரசாரத்தில் ஈடுபட மூன்றுநாள்களுக்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் தனக்கும் பங்கு இருப்பதாகவும், அதற்காக பெருமிதம் கொள்வதாகவும் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதுவும் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
இறுதியாக, நாதுராம் கோட்சே ஒரு "தேச பக்தர்' என்று பேசி மீண்டும் சர்ச்சைக்குவித்திட்டார். இதில் சாத்வி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியதை அடுத்து, அவர் மன்னிப்புக் கோரினார். இப்படி இந்த மக்களவைத் தேர்தலில் அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் சாத்வி என்றால் அதுமிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


